Saturday, November 20, 2010

இதயத் துடிப்பு அது உயிர் நாடி

    இதயம் என்ற சொல்லை  எல்லா மனிதரும் அறிந்திருப்பார்கள்.  அதுபோலவே இதயத்தடிப்பு பற்றியும் யாவரும் அறிவர்.  எனினும் இவ் இதயத்துடிப்பில் ஒழுங்குமுறை மாற்றப்படும் போது ஏற்படும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் மாற்றங்களை உண்டுபண்ணும் காரணிகள் யாவை என்பதும் அறிந்தும் அறியாத விடயங்களே ஆகும்.



     இதயத் துடிப்பின் சந்தம் தவறும்போது மாரடைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படும்.  இற்றுடன் அல்லாது திடீர் மரணம் போன்றனவும் ஏற்படலாம்.



·         சிலவகை மருந்துகள்,

·         மதுபானங்கள்,

·         போதைவஸ்துக்கள் போன்றவை இதயத் துடிப்பினை ஒழுங்கற்றதாகவும் வீதத்தை அதிகரிப்பனவாகவுமே காணப்படுகின்றன.



     இதயத்துடிப்பின் ஒழுங்குமுறை தவறுவதால் மற்றும் இதயத்துடிப்பு வீதம் அதிகரி;ப்பதால் இதயத்தின் வலுவான குருதிப் பாய்ச்சுகை குறைக்கப்படுகின்றது.  இதனால் இதயத்தில் குருதி தேங்குதல் நிகழ்கின்றது.  இதனூடு குருதி உறையும் வாய்ப்பு இதயத்தினுள் நிகழுகின்றது. உறைந்த குரதித் துணிக்கைகள், தொடர்ந்தும் இதய அதிர்வால்  உடைக்கப்பட்டு சிறுதுணிக்கைகள் ஆக்கப்பட்டு குருதியினுடைய குருதிக்குழாய்கள்களினூடு பயணிக்கும்.



     இவ் உறைந்த குருதிச் சிறுதுகழ்கள் குருதிக்கலன்களை அடைக்குந்தகவுடையன இதனை நாம் எமது.





     நடைமுறை நாளாந்த வாழ்வில்  காணக்கூடிய, உதாரணத்தூடு எடுத்துநோக்கின் எமது வீடுகளில் காணப்படும் கழிவு நீர்;க்குழாய்கள் சில திண்மக் கழிவுகளால் அடைபடுவது போன்ற ஒரு நிகழ்வு என்பதை உணரலாம்.  அது போன்றே மேற்படி குரதிக்குடாய்கிளலும் உறைந்த குருதியின் உடைந்த சிறுதுகள் அடைப்பதால் குறித்த பாகத்திற்கு குருதி விநியோகம் தடைப்படும்.  இக்குறித்த பாகம் மூளை எனின் பாதிப்பை பாரிச வாதம் (storke)  எனவும் அதுபோலவே இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்கள் முடியுருநாடி என்படும்.  (ஊழசழயெசல யுசவநசநைள) இல் ஏற்படும் அடைப்பு; ((ர்நயசவ  யுவவயஉம) மாரடைப்பு என்றும் பெயர்கொள்ளப்படும்



     இவ் இதயத்துடிப்பின் ஒழுங்குதவறும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தை வலுவ+ட்டும் நிகழ்வாகவே மாணவர்கள், உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளுக்கு முன்னைய நாளில் விருந்து நிகழ்வில் மதுபானத்தை மிகையளவில் அருந்தும் நிகழ்வு காணப்படுகின்றது.  இந்நிலையில் ஏற்படும் இதயப் பாதிப்புக்கள் (ர்ழடனையல hநயசவ ளலனெசழஅந)  என்று பெயரிட்டு அழைக்கப்படும்.



     இதன்போது

·         நெஞ்சு படபடப்பு,

·         களைப்பு,

·         தலைச்சுற்று,

·         மயக்கம்,

·         நெஞ்சுவலி,

·         மூச்சுவிட சிரமம் என்பனவும் இவற்றைவிட பாரிசவாதம், மாரடைப்பு, திடீர் மரணம் என்பனவும் ஏற்படுகின்றது.



     இவ்வாறு மதுபானம் அருந்துவதால் நுpinநிhசiநெ  என்னும் பதார்த்தம் குருதியில் சுரக்கப்பட்டு அதிகரிப்பதால் பரிவு நரம்புத்தொகுதி தூண்டப்பட்டு இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கின்றது. அது அன்றி அதன் ஒழுங்கும் தவறுகின்றது.  ஈற்றில் மேற்கூறிய நோய்நிலையை நோக்கிச் செல்கின்றது.

  

மனிதனை  மட்டுமல்ல

    மனித இதயத்தையும் நெறி தவறச்

            செய்யும் மதுபோதை.

புற்று நோய் என்பது... தொற்று நோயல்ல.

...



     புற்று நோய் பற்றி யாவரும் அறிந்திருப்பினும் அது தொடர்பில் பயம் எல்லோர் மனதிலும் காணப்படுகிறத. இதனால் புற்று நோய் தொற்று நோயாக இருக்குமோ என்று எண்ணுபவர்களும் உள்ளனர். இதனால் தமக்கும் வந்துவிடுமோ என்று எச்சரிக்கை உணர்வால் உந்தப்படுபவர்களும் உள்ளனர். புற்றுநோய் பற்றி எச்சரிக்கையுடன்  காணப்படும் மக்கள் புற்றுநோயி;ன் அறிகுறி பற்றியே அதிகம் அறிய முற்படுகின்றனர். அத்துடன் புற்று நோய் பற்றிய மன உலைச்சலாலும் நோயில்லாமலே மருத்துவரை நாடும் மக்கள் கூட்டம் என்று ஒரு வகையினரும் உருவாகியுள்ளனர்.



     இவர்கள் பொதுவாக நோயின் அறிகுறி பற்றியே அறிய முற்படுகின்றனரே தவிர நோயின் தோற்றுவாய் பற்றி அறிவதற்க்கு நோய் உருவாகும் விதம் பற்றி அறிவதற்கு ஏற்றவகையில் கருத்துக்களை அறிய முடியாதபடி மருத்துவம் தன்னை அந்நியப்படுத்தி விட்ட நிலையில் உள்ளது. இவற்றினால் மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலையில் இருந்து இன்னும் மோசமாக மக்கள் ஓசயல எடுத்தால் நோயை இனங்காணலாம் என்பதை தவறுதலாக ஓசயல எடுத்தால் ளுஉயn செய்தால் நோய் மாறும் என்ற தவறான எண்ணத்தில் மருத்துவ உலகின் கவர்ச்சியான விளம்பரங்களை எண்ணி தேவையற்ற கதிர்வீச்சல்களை உள்வாங்குதலும் வளமையாகிவிட்ட நிலையாக உள்ளது. தேவையற்ற கதிர் வீசல்களை உள்வாங்குவதால் கூட புற்று நோய் உருவாகலாம் என்பதை மக்கள் உணராத நிலை காணப்படுகிறது. இவை போன்றே மக்கள் மனதில் தவறான எண்ணங்கள் அதிகரித்துவிட்டன எனின் தவறல்ல… புற்று நோய் தொற்றி விடுமோ என்ற எண்ணமும் இவ்வாறே காத்திரமாகவே செறிந்துள்ளது.

புற்று நோய் என்பது கலங்களின் ஒழுங்கற்ற கட்டுக்கடங்காத வளர்ச்சி என்றே கூற வேண்டும். சாதாரண இழையங்களில் கட்டிகளாக அல்லது கழலைகளாக மாறிய கலங்களே புற்று நோய் என வெளிக்காட்டப்படுகின்றன.



     இவை நீருடோ சுவாசத்தூடோ அல்லது தொடுகை போன்றவற்றினூடோ மற்றும் வழிகளினூடாக தொற்றுவன அல்ல.



     உடற் தொழிற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் போது உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, இதய நோய்கள் இவை போன்று பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு உடல் இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களே; காரணமாகின்றன. எனினும் இவை பற்றி எவரும் தொற்றுவதாக அஞ்சுவதில்லை இவ்வாறான ; மனப்பான்மை மக்களிடையே புற்றுநோய்தொடர்பாக உருவாதல் வேண்டும். ஏனெனில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளில்  கதிரியாக்க, இரசாயன சத்திர சிகிச்சை முறைகள் காணப்படினும் நோயின் தீவிர நிலையில் அன்பான பராமரிப்பம் ஒர் சிகிச்சை முறையாகவே காணப்படுகின்றது.



     புற்றுநோயை பற்றி நாம் கருதுகையில் எமது உடலானது கலங்கள் என்னும் சிறு அமைப்புக்களால் ஆனது அதாவது சிறுவர்கள் உருவாக்கள் செய்வதற்கு பயன்படுத்தும் டீரடைனiபெ டிடழஉமள போன்றவை என்றே கூறலாம். இன்னும் கூறின் வீடு கட்டுவதற்கு பயன்படும் அரிகற்கள் போன்றவை. இவை ஒழுங்காக அடுக்கப்பட்டு கட்டப்படும் போது ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகின்றது.



     இவ்வாறே கலங்கள் என்னும் அமைப்புக்களாலும் எமது உடலை அதாவது ஒல்வொரு அங்கத்தையும் ஆக்குகின்றன. எமது உடலில் நாளாந்தம் கலங்கள் இறக்கின்றன. அவ்விடத்தை புதிய கலங்கள் நிரப்புகின்றன. இவையாவும் ஒரு சீரான விகிதத்தில் நடைபெறுவதால் உடலில் கட்டிகள் ஏற்படுவதில்லை. உடலில் கட்டிகள் ஏற்படும் Nபுhது அவை வெளித்தள்ளிக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கே நாம் சிந்திப்பின் குறித்த பகுதியில் கலங்களின் அபரிமிதமான (மிகை)வளர்ச்சியே காரணம் என்பதை உணரலாம்.



     உடலில் கலங்களின் உருவாக்கம் எல்லாம் சீரான விதத்தில் நடைபெறுவதற்கு என்று சிறப்புப் பொறிமுறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.   



     மனிதனது உடலும் கடவுளின் ஒரு விசித்திரமான படைப்பு என்நே கூறலாம். ஓர செயற்பாட்டை செய்வதற்கு கணணிகளில் எவ்வாறு நிகழ்ச்சி திட்டம் எழுதப்படுகின்றதோ அது போன்றே சுருக்கக் குறியீட்டு வசதிகள் பலவும் உருவாக்கப்பட்டு நிறமூர்த்தங்கள் என்னும் அமைப்புக்களில் கலங்களின் கருக்களில் காணப்படும் இந்த நிற மூர்த்தங்களின் தகவல்களின் அடிப்படையில் எமது உடலின் கட்டமைப்பானது ஆக்கப்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் காணப்படும் தகவல் மாறுபட்டு போகின்ற நிலையில் கலங்களின் வளர்ச்சியும் மாறுபடுகின்றன. அதனோடு கட்டுக்கடங்காத வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் ஏற்படும் தகவல் மாற்றங்கள் கதிர்வீச்சுக்கள் புற்று நோயை உண்டாக்கும் இரசாயன பொருட்களால் ஏற்படுகின்றன. மேலும் மனித உடலின் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு பொறுப்பான நிறமூர்த்தங்கள் இவை மரபணுக்கள் என்னும் ஜீன்கள் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். இவை உருவாக்கப்படும் போது ஏற்படும் தவறுகளை சீர் செய்வதற்காக விஷேட வகை மரபணு ஒன்று உருவாக்கப்படுகின்றது. இது Pள3 எனும் பெயர் பெறுகின்றது. எனினும் இவ் கட்டமைப்பு அலகில் தவறு ஏற்படும் போது சீர் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகள் எதுவுமில்லாத நிலையில் இக்கட்டமைப்பில் ஏற்படும் தவறே புற்று நோயாக வெளிக் காண்பிக்கப்படுகின்றது.



     இங்கு மனித உடலில் கட்டமைப்பை உருவாக்கிய கடவுளின் தவறு என்று கருத வேண்டிய நிலை காணப்படுகின்றது.



     இவ்வாறான புற்று நோயின் உருவாக்க பொறிமுறையை கருதும் போது நாம் அது தொற்று நோய் என்று கருதமுடியாதநிலை உறுதியாகின்றது.



     புற்று நோயால் பாதிப்புறுதல் கடவுளின் தவறு என்றே சொல்லும் நிலையில் தொற்றுமு; நோயாக அல்லாத புற்று நோயின் பாதிப்பில் வருந்தும் நோயாளியை வருத்துவது மனவேதனைக்குரிய தொன்றாகும். நோயாளி அவர் உங்கள் அன்புக்குரியவர்.

முரசுகரைவதை அலட்சியம்; செய்யலாமா?


முரசுகரைவது என்று எடுத்துப் பார்ப்பின் அனைவரும் என்றோ அறிந்த ஒரு அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். பல்துவக்கும் போது ஏற்படுவது சகஜம் என்று தான் கூறமுற்பட்டாலும் முரசுகதைவதை நாம் அலட்சியம் செய்துவிடின் அது பற்றி கவனம் செலுத்த தவறிவிடுகின்றோம். வேலைச்சுமை இவ்வாறு பல காரணங்களால் மருத்துவரை நாடுவதில் நேரத்தை வீணடிப்பதாக கருதுவதால் முரசுகரைதல் அலட்சியம் செய்யப்படுகின்றது. இதனூடாக சில சமயங்களில் பாரதூரமான நோய்நிலைகள் இனம் காணப்படலாம். முரசுகரைதல் பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம் பெரிதும் பாதகமற்ற நோய்நிலைகளில் முரசுகரைதல் ஏற்பட்டாலும் சில சமயங்களில் பாதகமான நோய்கள் சிலவற்றின் வெளிப்பாடாகவும் காண்பிக்கப்படுகின்றது. அதாவது குருதி சார் புற்றுநோய்களிலும் இவ்வறிகுறி காண்பிக்கப்படுகின்றது. சாதாரணமாக முரசுகரைதல்……..



     முரசில் ஏற்படும் அழற்சியாலும் அதன் ஊடு முரசில் பற்களில் படியும் படிவுகளினால் அதாவது பற்சுத்தம் பற்றி மிதமான கவனிப்புடன் உள்ளபோது ஏற்படலாம் இவை தவிர இவற்றின் தொடர் விளைவுகளாலும் தாடை என்பு வரையான கிருமித்தாக்கங்களினாலும் ஏற்படுகின்றது….. இவற்றைவிட சில விற்றமின் குறைபாடுகள் ஏவையஅin முஇ மற்றும் ளுஉரசஎல ஸ்கேவி நோய் போன்றவற்றுடன் மகப்பேற்றுக் காலங்களில் கற்பிணிகளிலும் ஏற்படுகின்றது.



     சில உயர்குருதியமுக்கத்திற்கு பயன்படும் மருந்துவகைகளும் முரசுகளின் மிகை வளர்ச்சியை தூண்டுகின்றன இவற்றின் போது பற்சுத்தம் தொடர்பில் போதிய கவனம் இல்லாத விடத்திலும் முரசுகரைதல் நிகழலாம்.



     இவை இவ்வாறிருக்க சில குருதி உறையா நோய்களிலும், குருதி சார் புற்றுநோய்களிலும் முரசுகரைதல ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.



     பற்சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் முரசுகரைதலை முறையான பற்சுத்தம் செய்யும் செயன்முறையை பல்மருத்துவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.



     எனினும் நாம் குருதிப்புற்று நோயை இனம் காணத்தவறி விடுவோமானால் மிகப்பெரிய பாதக விளைவை எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். இங்கு நாம் கருதும் குருதிசார் புற்றுநோய் குருதி மற்றும் என்பு மச்சையில் ஏற்படுகின்றது இதன் போது குருதிக்கலங்களின் அசாதாரண பெருக்கமும், உருவவியல் குறைபாடுகளும் ஏற்படுகின்றன என்றே கூற வேண்டும். இவ் குருதிசார் புற்றுநோய் (டுநரமநஅயை) நான்கு வகைப்படும். இது அவற்றின் தீவிரத்தன்மையை துரித கதியில் அடைவதையும் அவற்றின் தோற்றுவாய் எது என்பதையும் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.



     இது உயிர்கொல்லும் வுழி 10 புற்றுநோய் வரிசையில் இருப்பினும் இளநிலையிலே இனம் காணப்படின் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல குணப்படுத்தலாம் என்றே கூறமுடியும் அவ்வளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடிய ஒரு புற்றுநோய் என்பது இது தொடர்பாக உள்ள இதன் ஒரு நல்ல குணவியல்பு ; என்றே கூறவேண்டும்.



     எனினும் இளநிலையிலேயே இனம் காணத்தவறி உக்கிர நிலையை அடையும் போது இதன் விளைவாக குருதியில் அசாதாரண கலங்கள் பெருக்கமடைகின்றது அத்துடன் குருதியில் போசனை, ஒட்சிசன்காவும் செங்குருதிக்கலங்கள் எண்ணிக்கையும் குறையும் இதனால் குருதிச் சோகை ஏற்படும். இதைவிட வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கை குறைவும் புதிதாக உருவாகும் கலங்கள் நோய்எதிர்ப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதவையாகவும் காணப்படுவதால் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் தன்மை அதிகரிக்கும் இத்தோடு குருதியில் காணப்படும் குருதி உறைதல் அதாவது காயம் ஏற்படும் போது குருதிஉறைவை ஏற்படுத்தும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையும் குறைவுறுவதால் குருதிஉறைதல் தடைப்படும் இதனால்….. முரசில் காணப்படும் மயிர்த்துளைக் குழாய்கள் தாக்கப்படும் போது குருதி கசிவு ஏற்படும் இதன் விளைவாக முரசு கரைதல் ஏற்படும்.



     இவ்வாறு குருதிசார் புற்றுநோய் வெளிக்காண்பிக்கப்படுகின்றது. இதனை இதன் இளநிலையிலேயே இனம் காண்பது இதற்கான சிகிச்சையின் வெற்றியை தீர்மானிக்கின்றது. இக்குருதிசார் புற்றுநோய்கான தோற்றுவாய்க் காரணங்களாக சிலவகை இரசாயனப் பொருட்கள் குறிப்பாக டீநணெiநெ மற்றும் சிலவகை பிறவிக்குறைபாடுகள் னுழறளெலனெசழஅந இவற்றைவிட சிலவகை வைரசுத் தொற்றுக்களின் போதும் ஏற்படலாம் இவை எல்லாவற்றையும் விஞ்சி புகைத்தல் என்பது இதை துரிதப்படுத்தும் காரணியாகவே உள்ளது. அதாவது உயிர்ப்பற்ற புகைத்தல் அதாவது பெரியவர்கள் புகைக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் சிறுவர் சிறுமிகளும் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.



     முரசுகரைவதை அலட்சியம் செய்வதை தவிர்ப்பதன் மூலம் குருதிசார் புற்றுநோய் போன்ற தீயநோய் நிலைகளை இனம் காணலாம்.  இளநிலையிலேயே இனம் காண்பதால் புற்றுநோயை வெற்றி கொள்ளலாம்

புற்று நோய்க்கு வலுச் சேர்க்கும் நவீன வாழ்க்கை முறை

     புற்று நோய் பற்றி யாவரும் மனதிலும் பயம் உண்டு. ஆனாலும் எனக்கு புற்றுநோய் இருக்கா? கண்டுபிடித்து சொல்லுங்கள் டாக்டர் என்ற நிலையில் தான் எமது சமூகத்தில் பலர். ஆனால் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு எல்லாம் விண்ணைத் தாண்டி ஒலிக்கும் விதத்தில் வீச்சம் கொண்டு நகர்கின்றன. எனினும் புற்றுநோய்க்கு வலுச்சேர்க்கும் காரணிகள் இவை என்பது பற்றியும் எல்லோர்க்கும் தெரியும் இருப்பினும் இவை எல்லாம் ஏட்டு உருவில் மட்டும் தான் என்றுதான் ஐயம் தோன்றுகிறது. எனக்குப் புற்று நோய் இருக்கா என்ற ஐயப்பாட்டுடன் பயம் மிகுதியாகப் பெற்று சோதனைகள், இன்னும் சோதனைகள், சோதனை மேல் சோதனைகள் என்று பணத்தை வீணாக்கும் மக்கள் கூட்டம்.



     ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள எத்தனித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் எம் சந்ததி புற்றுநோயின் பிடியில் இருந்து மீளும் நிலை ஏற்படும்.



     ஆரோக்கியமற்ற உணவுமுறை அது தாண்டி உடற்பருமன் தேகப்பியாசம் துளியளவும் இன்றி உயர் செறிவில் கொழுப்புச் செறிவு இவையெல்லாம் ஒன்றில் ஒன்று ஆளுகை செய்கின்ற விசமிகள் என்று தான் கூற வேண்டும். மிகை உடலெடை கொண்ட பெண்களில் மார்பகம், சூல்சுரப்பி மற்றும் கருப்பையின் அகவுறை என்பவற்றில் புற்றுநோய் விருத்தியாகின்றது. இம்மூன்று உறுப்புகளிலும் கலவளர்ச்சியை தூண்டும் ஞநளவசழபநn ஈஸ்ட்ரோஜன் என்னும் ஒர்மோன் உயிரியல் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. கொழுப்பு மிகை உணவிற்கும் இவற்றுக்கும் மிடையான புற்றுநோய் தொடர்பை கருதுமிடத்து கொழுப்பு உணவுகளே ஈஸ்ரோஜன்னை குருதியோட்டர்ரினுள் மீள உறிஞசப்படக் கூடியவாறு அனுமதிக்க பெருங்குடலைத் தூண்டுகின்றதென நம்பப்படுகின்றது. இவ்வாறே கொழுப்புணவும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கும் இடையேயான தொடர்பை வநளவழளவநசழநெ எனும் ஓர்மோன் தீர்மானிக்கின்றது.



     இவற்றின் சமநிலைக்குழப்பம் புற்றுநோயை உருப்பெறச் செய்கின்றன.



     இது இவ்வாறே இருக்க தேகப்பியாசமின்மையும் மிகை கொழுப்புணவுடன் கைகோர்த்து நகர்கின்றது. உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை முறை பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழி வகுக்கின்றன. அத்துடன் தேகப்பியாசம் இன்மையே இங்கு தொடர்புபடுத்தப்படுகின்றது. அதாவது சொகுசு வாழ்க்கை முறையே உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை என்று கருதப்படுகின்றது. தேகப்பியாசம் இன்மையில் கழிவுப் பொருட்கள் குடலினூடு செல்கையில் தங்கியிருக்கும் இடைத்தங்கல் நேரம் மிகைப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயாக்கிகள் குடலுடன் தொடர்பில் நீண்ட நேரம் இருக்கின்றன. இதனால் குடலில் புற்றுநோய் ஊக்கிகள்pன் தொடர்பினால் குடற்புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. இவற்றை தாண்டி உடற்செயற்பாடு ஆனது ஆண் பெண் இருபாலாரிலும் இலிங்க ஓமோன்களின் சுரப்பு அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. இதனால் ஞநளவசழபநn வநளவழளவநசழநெ அளவில் ஏற்படும் மாற்றமும் புற்றுநோய்க்கு வலுச் சேர்ப்பதை முன்பு நாம் அறிவோம். இவற்றுடன் அல்லாது கர்ப்பத்தடை மாத்திரை வகைகளும் இலிங்க ஓமோன்களின் அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுவது அறியப்பட்ட விடயமேயாகும்.இதுவும் நம் சமுகத்தில் பெரும் பங்கை வகிக்கின்ற ஒரு விடயமே ஆகும்



     இது இவ்வாறிருக்க புகை மது இவையும் சொல்ல வேண்டியதில்லை. புகையில் 4000க்கு மேற்பட்ட இரசாயனப்; பொருட்கள் உள்ளன. புகைத்தல் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது எல்லோரும் அறிந்த தொன்று என்றே கூற வேண்டும்.



     எனினும் மதுசாரத்தால் ஈரல் பாதிப்புறும் போது பல இரசாயனப் பொருட்கள் உடலில் பிரித்தழிக்கப்படாது தேங்குகின்றன. இதனுள் புற்றுநோய் ஊக்கிகளும் அடங்குகின்றன.



     ;.சூடான உணவுகள் காரம் சேர் உணவுகள் புகையூட்டப்பட்ட உணவுகள் இவை எல் லாம் நைட்ரைட்டுக்கள் கொண்டுபதனிடுவதால். இந்நைட்ரைட்டுக்கள் புற்றுநோயாக்கிகளாக அமைவதாலும் இவை நாகரிக உலகில் தொலைக்காட்சி, விளம்பரங்களில் அதிரவைக்கும் கவர்ச்சிகரமான தன்மையைக் கொண்டுள்ளமை கவலைக்குரியதாகவே உள்ளது.



     இது இவ்வாறிருக்க மிகை வளமூட்டிய மரக்கறிகள் மருந்தே;றிய, மற்றும் பூச்சி நாசினி விசிறிய மரக்கறிகள் இவையாவும் செய்யும் கொடுமையின் எல்லை தாங்க முடியாது என்றே கூற வேண்டும். பொதுவாக மரக்கறிகள் நார்ப்பொருட்கள் இவை குடலில் நீண்ட நேரம் தங்குவன. இவற்றுக்கு மருந்துகள் ஏற்றியும் பூச்சிநாசினிகள் விசிறியும் இருப்பின் சொல்ல வேண்டுமா குடலில் நீண்ட நேரம் இவ் இரசாயனங்கள் தங்குவது.. இதனால் குடற்புற்று நோய் வலுச் சேர்க்கப்படுகின்றது என்றால் மிகையாகாது.



     எனவே புற்று நோயில் இருந்து விடுதலை பெற்ற ஓர் சமூகத்தை உருவாக்கி ஆராக்கியம் மிக்க சமுகத்தை நோக்கி நகர வாழ்க்கை முறையை செப்பனிடுவோம்.