Saturday, December 4, 2010

கருவறையும் ஒரு விந்தை உலகம் தான்

உயரப் பறந்து கொண்டு இருக்கும் விஞ்ஞானத்திற்கு உண்மையில் விடை சொல்லத் தெரியவில்லை. ஆரம்பத்தில் கருவறையில் உரு கலமாக உருப் பெறும் உயிர் ஒரு விதமாக இருக்கும். கருவின் கலங்கள் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்குகின்றது. இங்கு உருவாகும் கலங்களில் குறிப்பிட்ட கலம் கையாகவும்இ காலென்றும்இ நரம்புகளாகவும்இ  வன்மைமிக்க என்புகளாகவும் மென்மை மிக்க மூளையாகவும் பரிணமிக்கின்றது என்றால் படைப்பின் இரகசியம் என்று தான் கூற வேண்டும்.

     இதில் எந்தக் கலமும் வளர்ச்சியடைந்து உடலின் எந்த உறுப்பாகவும் உருவாகளாம் இப்படியான ஒரு விந்தை மிகு நிகழ்வே இங்கு நிகழ்கின்றது இக்கலங்களுக்கு எக்கலம் வேண்டுமானாலும் எவ்வுறுப்பாகவும் உருப்பெறும் வல்லமையை வழங்கியுள்ளமை தான் விந்தை என்றால் மிகையாகாது. இப்படி இந்தக் கலங்களால் மட்டும் இப்படித் தன்னைத் தானே மாற்றிக்கொள்ள முடிகின்றது என்பது அறிவியல் தன் விழிகளை அகலத்திறந்து விழிக்கச் செய்கின்ற புதராகவே உள்ளது……. இன்றும் தொடர்கிறது.

     இவ்வாறுபட்ட கலங்களை வளரச்செய்து மனிதனுக்கு தேவையான சிறுநீரகத்தை, இதயத்தை, இன்னும் மாற்றீடு செய்யக் கூடிய உறுப்புக்களை எல்லாம் உருவாக்கலாமா என்று மூக்கு நுனியில் விரலை வைத்தபடி முனைகின்றது விஞ்ஞானம் சிந்தனையில்….. ஆராட்சிகளை அடுக்கிக்கொண்டே செல்கிறது ஆனாலும் முடியவில்லை அதுதான் இரகசியம்….. இன்றும் தெரியவில்லை. இந்த விசேட சக்திகொண்ட இந்த ஆரம்பக்கட்ட கலங்கள் நாளாக நாளாக வௌ;வேறு விதமான கலங்களாக உருவெடுக்கும். இவற்றில் ஒவ்வொன்றும் இதயம் மூளை சிறுநீரகம் நாடி நரம்புகள் தோல் எலும்புகள் என்று ஒவ்வொரு உறுப்புக்கும் எனப்பிரிந்து அந்த உறுப்புக்கள் வளர்ச்சியடையத் தொடங்கும்.

     ஒவ்வொருகலங்களும் அவற்றின் வேலைகளுக்கு எப்படித்தான் சிறப்புத் தேர்ச்சி பெறுகின்றனவோ.

     இந்த வளர்ச்சிப்பருவத்தில் தான் எதிரிகள் இவர்களைத்தாக்க முற்படுகின்றார்கள் என்றே கூறவேண்டும் எதிரி என்றால் சில நுண்ணங்கிகள், வைரசுக்கள், பக்றீரியாக்கள் மற்றும் தாயின் குருதியில் செறிவுறும் சில மருந்துகள், யுவெiடியஉவநசயைடள    யுவெiஉழயபரடயவெள    யுவெiஉழnஎரடளயவெள  யுவெihலிநசவநளெiஎநள  வகைமருந்துகள் என
  அனேகமாகமான மருந்துகள், ஓ கதிர்வீச்சுக்கள் என்பவை ருபெல்லா வைரசு இக்கலங்களில் தாக்கும் போதே பிறக்கும் குழந்தைகள் பல கூட்டு விளைவுகளாக பாதிப்புகளை சுமந்த வண்ணம் ஜெனிக்கின்றன. இந்த குறிப்பிட்ட வளர்சிக்காலம் தாண்டிய நிலையில் பாதுகாப்பான கட்டத்தை இவை அடைகின்றன. எனினும் ருபெல்லா போன்றவற்றின் பாதிப்பு இதன்பின் ஜெனிக்கும் நேரம் வளர ஆபத்தானதாகவே கருதப்படும்.

     இப்படி எல்லாம் விந்தை மிக கருவறையில் விரல்கள் எல்லாம் முளைத்து, கை கால் முளைத்த கருவாக உருப்பெறுகின்றது. இவற்றை கழியொலி நுணN;ணாலியின் உதவியுடன் (ளுஉயn)அவதானிக்க முடியும்.

     இப்படியே கருப்பையின் ஒரு ஓரத்தில் கருவளர்ந்து கொண்டிருக்க இன்னோர் பக்கம் அதை சுற்றி தண்ணீர் இருக்கும். கரு வளரவளர இந்தத் தண்ணீர் குழந்தையை சுற்றி பன்னீர்க்குடம் ஆகின்றது. கருவைச்சுற்றி பஞ்சனைபோன்று பாதுகாக்கின்றது. அதிர்ச்சியில் இருந்தும் தாங்குகின்றது.

     இதைவிட கருப்பையில் கருவேர் பிடித்த பகுதியில் தான் தாய் மணிக்கொடி அது தொப்புள் கொடி தொடர்கிறது இது உணவுக்கடத்தலை செய்கின்ற உறவுப்பாலம் என்றே கூற வேண்டும் இங்கே உள்ள விந்தை உலகத்தில் விளையாடிய வண்ணம் சிசு இருப்பதை ளுஉயn செய்யும் போது பார்க்க முடியும். இச்சிசுவானது இங்கு ஆடுதல். குதிப்பது நடனமாடுவது என்று ஒரே விளையாட்டுத்தான். இது ளுஉயn செய்யும் டாக்டர்களால் இரசிக்கப்படுவதும் உண்டு.

     இந்த அசைவுகளை கருவுற்ற பெண் 5ம் மாதத்தில் உணர்கின்றாள் இது சில பெண்களில் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சியொன்று மென்மையாக தனது இறக்கைகளை வீசிப்பறப்பது போல இருக்கும் என்பார். இன்றும் சிலரோ கடிகார சத்தம் போல ஏதோவொன்று வயிற்றுக்குள் அவ்வவ்போது கேட்கிறது என்பர். இப்படி ஒவ்வொரு தாயும் அவரவர் உணர்வுக்கேற்ப அந்த அனுபவத்தை விபரிப்பார்கள் இது எப்படியோ அது அந்த தாய்க்கு முழு அளவில் சந்தோசத்தை அள்ளி வழங்கும் இன்ப அனுபவம் என்றே கூற வேண்டும். இவ்வாறு அசையும் சிசு 3-மாதங்கள் தொடக்கம் 8மாதங்கள் வரை தொடரும் சுறுசுறுப்பும் குன்றா வண்ணம் சிலரில் அசைவு கூடுதலாகவும் தென்படும். ஜெனிக்கும் நாளை நெருங்கி கர்ப்பப்பையில் தண்ணீர் குறைவதால் அசைவு குறைவுறும் எனினும் பயம் கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது.