Saturday, December 4, 2010

புகைப்பவர் யாரோ….

புகைப்பதால் சுவாசநோய்கள் புற்றுநோய்கள் வரும் என்பது யாவரும் அறிந்தது… இதைவிட
சிகரெட் பெட்டிகளில் கூட இவ்வசனங்கள் விளம்பர வாக்கியங்களாக
பயன்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்தது. எனினும் இங்கு புகைப்பவர் பற்றி
கருதவில்லை. புகைப்பவரின் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் குருதிப்புற்று நோய்க்கு
ஆளாவது அண்மைக்கால ஆய்வுக் கற்கைகளை நிரப்பிய வண்ணமே உள்ளன.
உடலில் காணப்படும் குருதியானது இதயத்தின் வலிந்த பாய்ச்சுகையால் உடலில் சுற்றி
ஓட்டப்படுகிறது. இதனால் குருதியானது அதாவது உடலில் காணப்படும் குருதியின் எந்தவொரு
துணிக்கையும் சுவாசப்பை போன்ற, அங்கங்களை பல தடவைகள் கடக்க வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றன. அதாவது ஒரு வட்டப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்
ஓட்டவீரர்கள் எப்படியும் ஒரு குறித்த இடத்தில் காணப்படும் கம்பத்தை ஒவ்வொரு
முழுச் சுற்றின் பின்னும் கடக்க வேண்டியே அமையும் இவ்வாறே சுவாசப்பையை கடக்கும்
போது தான் காவி வந்த புழ2 காபனீரொட்சைட்டை மற்றும் கழிவுகளை விட்டு விட்டு
சுவாசக் காற்றை காவிச் செல்கின்றது. இங்கே சுவாசக் காற்று என்னும் போது நாம்
சுவாசிக்கின்ற வளி. இதில் சிகரெட் புகையும் சேர்ந்தே காணப்படும்.
புகைப்பவர்களால் வெளிவிடப்படும் புகையானது கணிசமான அளவில் வீட்டின் சூழலில்
தங்கிவிடுகின்றது.
       இப்புகையானது சிறுவர் சிறுமியரின் சுவாசக் காற்றில் காத்திரமான பங்கை வகிக்கும்.
       புகைத்தலின் மூலம் சூழலுக்கு வெளிவிடப்படும் இரசாயனப் பதார்த்தங்களை பட்டியல்
இட்டால் அது நீண்டு கொண்டே செல்லும்.
       இங்கு முக்கியமாக பென்சீன் வகை வேதிப் பொருளை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். இவ்இரசாயனப் பொருள் சிறுவரின் சுவாச வளியூடு நுரையீரலை அடைந்து
தொடர்ந்து குருதியினூடு பாய்ச்சப்பட்டு முழுக்குருதியிலும் பயணிக்கும்.
       மேற்படி பென்சீனானது குருதுpயின் கலங்களின் உருவாக்கத்தில் பெரிதளவில்
மாறுபாடுகளை ஏற்படுத்தவல்லது. குருதியானது திரவம், கலம் என்றும் உட்கட்டுமானத்தை
உடையது. இப்பொருளினால் குருதியில் காணப்படும் குருதிக்கலங்களின் உருவாக்கம்
பாதிப்படையும்.
       குருதிக் கலங்களின் உருவாக்கம் பாதிப்படைவதால் உருவாகும். மாறுபட்ட
குருதிக்கலங்கள் குருதியில் அதிகரிக்கும் இத்துடன் நின்றுவிடுவதில்லை.
தொடர்ந்தும் குருதிக் கலங்களின் உருவாக்கம் பாதிக்கப்பட்டெ காணப்படும். அதாவது
இவ்விரசாயனப் பதார்த்தம் குருதிக் கலங்களின் உருவாக்கத்திற்கான நிகழ்ச்சி
நிரலை மாற்றம் செய்து விடுவதால் தொடர்ந்தும் இத்தவறு நடைபெற்று புற்றுநோயின்
கோரப்பிடியினுள் தள்ளப்படுகின்றது.
       புற்றுநோயின் போது கலங்களின் உருவாக்கம் நடைபெறுகின்ற போது ஏற்படும் தவறுகளை
சீர்செய்வதற்கான ஜீன் கட்டமைப்பு பாதிப்புற்றிருப்பதால் தவறுகள் தொடர்ந்த
வண்ணமே நீழ்கின்ற ஒரு தன்பியலாகவே உபயோகத்திற்கு ஏற்றதல்லாதவாகின்றன.
இக்குருதிப் புற்று நோயானது தாக்கப்படும் கலங்களின் வகைக்கு ஏற்பவேறுபடும்.
இந்நோய்நிலையில் என்பு மச்சையும் இவ் புற்றுநோயாக்கிகளால் தாக்கப்பட்டு
குருதிக்கலங்களை செங்குருதிச் சிறுதுணிக்கைகள் வெண்குருதிச் சிறுதணிக்கைகள்,
நிணநீர் குழியங்கள், குருதிச் சிறுதட்டு என்பன பாதிக்கப்படும். இதனால்
குருதிச்சோகை, நீர்ப்பிடணம் குன்றல், குருதிக்கசிவு தோலின்கீழ் ஏற்படல்
மற்றும் நிணநீர்கணு வீக்கம் என்று இன்றும் பல நிலைகளாக தொடர்ந்த வண்ணம்
காணப்படும். புகைப்பவர்களால்
பாவம் அறியாத சிறுவரின்
குருதியில் புற்றுநோய வரலாமா?