Friday, December 17, 2010


  வாழ்க்கை என்பது சில்லென்று ஒரு காதல் என்று முடிவதில்லை. கண்ணை;பறிக்கும் மலர்த்தோட்டம், அது தனிக்கூட்டம் அன்பு, பண்பு அறன் என்பவற்றை உடைய அரசாங்கம் இங்கே வீசுகின்ற தென்றாலும்

 புகைப்பதால் சுவாசநோய்கள் புற்றுநோய்கள் வரும் என்பது யாவரும் அறிந்தது… இதைவிட
சிகரெட் பெட்டிகளில் கூட இவ்வசனங்கள் விளம்பர

 கணினியில் நீண்ட நேரம் பணி புரிபவர்கண்டு.  கண்நோவுடன் சார்ந்தாக ஒரு தொகை கூட்டு விளைவுகள் உதைப்படுவதை பலரும் கூறியிருப்பர். கணினியின்

Tuesday, December 14, 2010


புகைத்தலால் இன்பமிழக்கும்
வாழ்க்கை என்பது சில்லென்று ஒரு காதல் என்று முடிவதில்லை. கண்ணை;பறிக்கும் மலர்த்தோட்டம், அது தனிக்கூட்டம் அன்பு, பண்பு அறன் என்பவற்றை உடைய அரசாங்கம் இங்கே வீசுகின்ற தென்றாலும் சில்லென்ற  ....மேலும்


புகைப்பவர் யாரோ….
புகைப்பதால் சுவாசநோய்கள் புற்றுநோய்கள் வரும் என்பது யாவரும் அறிந்தது… இதைவிட
சிகரெட் பெட்டிகளில் கூட இவ்வசனங்கள் விளம்பர...மேலும்..

Monday, December 13, 2010

நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பென்றால் எதிரியா.

அன்றாடம் நீரிழிவு நோயாளிகள் என்று பார்க்கப்போனால் மருத்துவ கிளினிக்கில்; அரைவாசியை விஞ்சியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலை மற்றும்  மேலும்

கண்களுக்கு கணினி எதிரியா?

கணினியில் நீண்ட நேரம் பணி புரிபவர்கண்டு.  கண்நோவுடன் சார்ந்தாக ஒரு தொகை கூட்டு விளைவுகள் உதைப்படுவதை பலரும் கூறியிருப்பர். கணினியின் முன் உட்சார வேண்டிய தேவை இருக்கின்றது. கண்வலி, தலைவலி, இப்படி நோய் நிலையும் மேலும்

காதல் சிதைவுகளும் கருச் சிதைவுகளும்

காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி
கருகி வீழ்கின்றன. இவ்வாறே நம் சமூகத்திலும் உரசிக் கொண்ட பாவத்திற்காய்
உயிர்விடும் தீக்குச்சிகளாக காதல் என்ற சொல்லில் தொடங்கி  
மேலும்

Saturday, December 4, 2010

நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பென்றால் எதிரியா.

அன்றாடம் நீரிழிவு நோயாளிகள் என்று பார்க்கப்போனால் மருத்துவ கிளினிக்கில்; அரைவாசியை விஞ்சியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலை மற்றும் விசேட நிலைகளை அவதானிக்க நீரிழிவுக்கென்றே தனி கிளினிக் ஜபினிஆய்வநிலையம் ஸ ;அதைவிட கண்காட்சிகள் இப்படி எல்லாம் அதன்பால் கவன ஈர்ப்பை தூண்டுகின்றது. இங்கே நீரிழிவு நோயாளியின் உணவுக் கட்டுப்பாடு என்று கூறிவிட்டு அட்டவணை போட்டுக் கொண்டால் போதாது. நோயாளியின் மனம் என்பது தான் இங்கு கருதப்பட வேண்டியது.

     நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பு சாப்பிட எண்ணம் அதிகம் என்று தான் கூற வேண்டும். அனேகமான நோயாளர் இனம் காணப்பட்டு சில காலங்கள் வரை கட்டுப்பாடான உணவை கொண்டிருப்பினும் சிறிது சிறிதாக கால ஒட்டத்தில் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுவதே வழமை என்றநிலை காணப்படுகின்றது. நாம் வெளியில் இருந்து கொண்டு பார்ப்பது சுலபம் ஆனால் நோயாளியின் மனநிலை நோயாளிக்குத்தான் தெரியும்.

     நீரிழிவு நோயாளிகட்கு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சீவிப்பதா? என்ற விரக்தி காணப்படுகிறது ஆசைக்கு எதுவும் சாப்பிட முடியாது என்ற கவலை அப்படி ஒரு “துறவறம்” என்ற எண்ணம், அதுபோக இன்சுலின் மருந்தேற்றும் நோயாளி என்றால்……………. நாம் சுகமாக நினைக்கலாம் ஊசியை ஏற்றிக்கொள்வது தானே. என்று ஆனால் நமக்கு நாமே ஊசியை ஏற்றும்போது அதுவும் நோய்பற்றிய விரக்தி கவலை இவற்றுடன் என்றால் அது அனேக நோயாளிற்கு இதயத்தில் தான் வலியை உண்டுபண்ணும் தினம்தோறும் தவணைமுறையில். ஏன்ரே கூறவேண்டும்

     இவ்வாறு வலிசுமக்கும் நோயாளியை மருத்துவர் “கடவுளின் அடுத்த படி” எசுவதென்றால்…………….. நோயாளிகள் மருத்துவர் அளவிற்கு படித்துவிட்டு வருவதில்லை அவ்வளவு படித்திருந்தால் மருத்துவரிடம் வரமாட்டார்கள் இன்னும் மருத்துவம் மூடு மந்திரம் என்ற நிலை நம் சமூகத்தில் இருந்து அகலவில்லை. இவ்வாறான இருநிலை நிலைகளும் நோயாளியை மருத்துவரிடம் இருந்து அன்னியப்படவே செய்கின்றது. நோயாளி மருத்துவரிமிருந்து அன்னியப்பட்டால் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அது ஒரு விசவட்டமாக நகரும் என்றுதான் சொல்லவேண்டும்.

     நோயாளிகள் பலருக்கு இனிப்பு சாப்பிடுவதென்றால் அலாதிப்பிரியம் என்றுதான் சொல்ல வேண்டும் சில வகை இனிப்புகளை உட்கொள்ள முடியும் என்றால் இவர்கள் மனங்களில் ஏற்படும் சந்தோசமும் அதிகம் நீரிழிவு நோயாளிகள் எல்லோருக்கும் இலகுவாகக் கிடைக்கு இனிப்பு சீனி இதை “விளையாட்டுப் பிள்ளைகள்” போல் கள்ளமாக உட்கொள்வதில் கொள்ளை இன்பம் இருக்கிறது. இவர்கட்கு சீனி எதிரி என்றல்ல துரோகி என்றே கூறவேண்டும். ஆனாலும் இனிப்பு வகையில் இனிய நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள் இவ்விடயம் மக்கள் கண்ணில் படுமாயின் அவர்கட்கு மகிழ்ச்சியான தொருவிடயமாகவே இருக்கும் அத்துடன் கட்டுக்கடங்க மறுக்கும் உணவுக்கட்டுப்பாட்டில் ஏற்படும் கடினத்தன்மையை சீர்செய்வதும் எளிமையாகீவிடும்…. அத்தோடு இவர்கள் மனதில் உள்ள ஒரு முக்கிய கவலை நீங்கிவடும். இதனாலும் இவர்களது நோயின் தீவிரத்தையும் குறை;வுறும் ஏனெனில் கவலைப்படுவதால் உடல் இரசாயனவியல் மாற்றங்களினூடு நீரிழிவை கட்டுப்பாட்டில் இல்லாது போக செய்கின்றது.

     யுளிசவயஅநஇ ளுயஉஉhயசinஇ ளுரஉசயடழளந நெழவயஅநஇ யஉநளரடகயஅந pழவயளளரைஅஇ ளவநஎயை.இன்னும் ஐளழஅயடவஇ ஆயடவவைழடஇ ஆயnnவைழட ளழசடிவைழட இப்படியே ஓலடவைழைட என்று நீண்டபட்டியல் உள்ளது இவர்கள் இனிய நண்பர்கள் என்பது பலருக்கு தெரியாது. இவ்விடயம் இவர்களின் குருதியில் வெல்லக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

     மேலும் ஒரு சந்தர்ப்பத்தை கருதி நோயாளிகளின் உடலில் புண்கள் இருப்பின் அவற்றில் கிருமித்தாக்கம் இருக்கும் இதன்போது குருதியின் வெல்லக்கட்டுப்பாடு என்பது மிகக்கடினம். அவ்வாறே குருதியில் வெல்லம் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் புண்கள் மாறாது எனவே ஒன்றை ஒன்று ஆள்கின்ற தன்மை காணப்படுகின்றது இவற்றை கருதும் போது நோயாளியின் உணவுக்கட்டுப்பாடு மருந்துகளை கொண்டு ஏற்படுத்தும் கட்டுப்பாடு இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இங்கே நோயாளியின் உணவுக்கட்டுப்பாடு என்பது நோயாளியின் மனதில் ஏற்படும் ஒருபெரும் விடயம் இது சரிவர அமையாதவிடத்து மருந்துகளால் என்ன மந்திரத்தால் கூட மாங்காய் விழுத்துவது சாத்தியமில்லை. ஆகவே நோயாளியுடனான அன்னியோன்னியம், நட்புறவு மிகவும் தேவையானது அதைவிட புரிந்துணர்வு மிகமிகத் தேவையானது.

     புரிந்துணர்வு என்னும் போது டால்ஸ்ராயின் கருத்துப்படி “பிரச்சினையை நமது கண்களினூடாக பார்ப்பதல்ல பிரச்சினையைக்குட்பட்டிருக்கும் குறித்த நபரின் கண்ணினூடாக பார்ப்பதே” என்று தான் செல்ல வேண்டும்.

     இவ்வாறு புரிந்துணர்வுடன் மருத்துவம் செயற்படின் நோயாளிகள் மனதில் மகிழ்ச்சி நிலவும் அதுவே பெருமருந்தென்று கூறலாம். இந்த வகையில் நோயாளிகளின் மனதில் மகிழ்ச்சி நிலை கொள்ளும் விதமாக நோயாளிகட்கு பயன்படுத்தத்தக்க இனிப்பு வகைகளை அறிமுகம் செய்வது அவர்களின் மனங்களில் ஒருபெரும் பகுதியில் இருக்கும் கவலை விரக்தியை நீக்கி நாமும் சுகதேசிகள் போன்று உள்ளத்தில் ஒரு தென்பை ஏற்படுத்துவது என்பது உலகத்தில் பெரும் மருந்தாகவே கணிப்பிடப்படும். 

கருவறையும் ஒரு விந்தை உலகம் தான்

உயரப் பறந்து கொண்டு இருக்கும் விஞ்ஞானத்திற்கு உண்மையில் விடை சொல்லத் தெரியவில்லை. ஆரம்பத்தில் கருவறையில் உரு கலமாக உருப் பெறும் உயிர் ஒரு விதமாக இருக்கும். கருவின் கலங்கள் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்குகின்றது. இங்கு உருவாகும் கலங்களில் குறிப்பிட்ட கலம் கையாகவும்இ காலென்றும்இ நரம்புகளாகவும்இ  வன்மைமிக்க என்புகளாகவும் மென்மை மிக்க மூளையாகவும் பரிணமிக்கின்றது என்றால் படைப்பின் இரகசியம் என்று தான் கூற வேண்டும்.

     இதில் எந்தக் கலமும் வளர்ச்சியடைந்து உடலின் எந்த உறுப்பாகவும் உருவாகளாம் இப்படியான ஒரு விந்தை மிகு நிகழ்வே இங்கு நிகழ்கின்றது இக்கலங்களுக்கு எக்கலம் வேண்டுமானாலும் எவ்வுறுப்பாகவும் உருப்பெறும் வல்லமையை வழங்கியுள்ளமை தான் விந்தை என்றால் மிகையாகாது. இப்படி இந்தக் கலங்களால் மட்டும் இப்படித் தன்னைத் தானே மாற்றிக்கொள்ள முடிகின்றது என்பது அறிவியல் தன் விழிகளை அகலத்திறந்து விழிக்கச் செய்கின்ற புதராகவே உள்ளது……. இன்றும் தொடர்கிறது.

     இவ்வாறுபட்ட கலங்களை வளரச்செய்து மனிதனுக்கு தேவையான சிறுநீரகத்தை, இதயத்தை, இன்னும் மாற்றீடு செய்யக் கூடிய உறுப்புக்களை எல்லாம் உருவாக்கலாமா என்று மூக்கு நுனியில் விரலை வைத்தபடி முனைகின்றது விஞ்ஞானம் சிந்தனையில்….. ஆராட்சிகளை அடுக்கிக்கொண்டே செல்கிறது ஆனாலும் முடியவில்லை அதுதான் இரகசியம்….. இன்றும் தெரியவில்லை. இந்த விசேட சக்திகொண்ட இந்த ஆரம்பக்கட்ட கலங்கள் நாளாக நாளாக வௌ;வேறு விதமான கலங்களாக உருவெடுக்கும். இவற்றில் ஒவ்வொன்றும் இதயம் மூளை சிறுநீரகம் நாடி நரம்புகள் தோல் எலும்புகள் என்று ஒவ்வொரு உறுப்புக்கும் எனப்பிரிந்து அந்த உறுப்புக்கள் வளர்ச்சியடையத் தொடங்கும்.

     ஒவ்வொருகலங்களும் அவற்றின் வேலைகளுக்கு எப்படித்தான் சிறப்புத் தேர்ச்சி பெறுகின்றனவோ.

     இந்த வளர்ச்சிப்பருவத்தில் தான் எதிரிகள் இவர்களைத்தாக்க முற்படுகின்றார்கள் என்றே கூறவேண்டும் எதிரி என்றால் சில நுண்ணங்கிகள், வைரசுக்கள், பக்றீரியாக்கள் மற்றும் தாயின் குருதியில் செறிவுறும் சில மருந்துகள், யுவெiடியஉவநசயைடள    யுவெiஉழயபரடயவெள    யுவெiஉழnஎரடளயவெள  யுவெihலிநசவநளெiஎநள  வகைமருந்துகள் என
  அனேகமாகமான மருந்துகள், ஓ கதிர்வீச்சுக்கள் என்பவை ருபெல்லா வைரசு இக்கலங்களில் தாக்கும் போதே பிறக்கும் குழந்தைகள் பல கூட்டு விளைவுகளாக பாதிப்புகளை சுமந்த வண்ணம் ஜெனிக்கின்றன. இந்த குறிப்பிட்ட வளர்சிக்காலம் தாண்டிய நிலையில் பாதுகாப்பான கட்டத்தை இவை அடைகின்றன. எனினும் ருபெல்லா போன்றவற்றின் பாதிப்பு இதன்பின் ஜெனிக்கும் நேரம் வளர ஆபத்தானதாகவே கருதப்படும்.

     இப்படி எல்லாம் விந்தை மிக கருவறையில் விரல்கள் எல்லாம் முளைத்து, கை கால் முளைத்த கருவாக உருப்பெறுகின்றது. இவற்றை கழியொலி நுணN;ணாலியின் உதவியுடன் (ளுஉயn)அவதானிக்க முடியும்.

     இப்படியே கருப்பையின் ஒரு ஓரத்தில் கருவளர்ந்து கொண்டிருக்க இன்னோர் பக்கம் அதை சுற்றி தண்ணீர் இருக்கும். கரு வளரவளர இந்தத் தண்ணீர் குழந்தையை சுற்றி பன்னீர்க்குடம் ஆகின்றது. கருவைச்சுற்றி பஞ்சனைபோன்று பாதுகாக்கின்றது. அதிர்ச்சியில் இருந்தும் தாங்குகின்றது.

     இதைவிட கருப்பையில் கருவேர் பிடித்த பகுதியில் தான் தாய் மணிக்கொடி அது தொப்புள் கொடி தொடர்கிறது இது உணவுக்கடத்தலை செய்கின்ற உறவுப்பாலம் என்றே கூற வேண்டும் இங்கே உள்ள விந்தை உலகத்தில் விளையாடிய வண்ணம் சிசு இருப்பதை ளுஉயn செய்யும் போது பார்க்க முடியும். இச்சிசுவானது இங்கு ஆடுதல். குதிப்பது நடனமாடுவது என்று ஒரே விளையாட்டுத்தான். இது ளுஉயn செய்யும் டாக்டர்களால் இரசிக்கப்படுவதும் உண்டு.

     இந்த அசைவுகளை கருவுற்ற பெண் 5ம் மாதத்தில் உணர்கின்றாள் இது சில பெண்களில் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சியொன்று மென்மையாக தனது இறக்கைகளை வீசிப்பறப்பது போல இருக்கும் என்பார். இன்றும் சிலரோ கடிகார சத்தம் போல ஏதோவொன்று வயிற்றுக்குள் அவ்வவ்போது கேட்கிறது என்பர். இப்படி ஒவ்வொரு தாயும் அவரவர் உணர்வுக்கேற்ப அந்த அனுபவத்தை விபரிப்பார்கள் இது எப்படியோ அது அந்த தாய்க்கு முழு அளவில் சந்தோசத்தை அள்ளி வழங்கும் இன்ப அனுபவம் என்றே கூற வேண்டும். இவ்வாறு அசையும் சிசு 3-மாதங்கள் தொடக்கம் 8மாதங்கள் வரை தொடரும் சுறுசுறுப்பும் குன்றா வண்ணம் சிலரில் அசைவு கூடுதலாகவும் தென்படும். ஜெனிக்கும் நாளை நெருங்கி கர்ப்பப்பையில் தண்ணீர் குறைவதால் அசைவு குறைவுறும் எனினும் பயம் கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது.

காதல் சிதைவுகளும் கருச் சிதைவுகளும்

காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி
கருகி வீழ்கின்றன. இவ்வாறே நம் சமூகத்திலும் உரசிக் கொண்ட பாவத்திற்காய்
உயிர்விடும் தீக்குச்சிகளாக காதல் என்ற சொல்லில் தொடங்கி தற்கொலைவரை
நீழ்கின்ற துன்பியல் சாகரம் ஏன் இதயத்தில் இடம் தேடிய பறவை சிறைப்படவில்லை
சிதையில் எரிவதா?.
தற்போது பெரிதும் காதல் என்ற உருமறைப்பில் காமம் அரங்கேற்றப்படுவதே
நிகழ்வாகிப் போய்விட்ட சூழலில் கருச்சிதைவுகளும் தற்கொலைகளும் சகஜம் என்று
கூறும் நிலையை நோக்கி நகர்கின்றன.
கருச்சிதைவு மேற்கொள்வது சட்டப்படி தவிர்க்கப்பட்ட விடயமாகும். இதைவிட
நாட்டின் சில பாகங்களில் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு உண்டு பண்ணும் மருந்து
வகைகள் பெற முடியாத நிலையே காணப்படுகிறது. (யாழ் குடாநாடு உட்பட) எமது சூழலில்
அண்மைக்கால மாற்றங்களின் பின் அலைபேசிகளின் அதிகரித்த பயன்பாடு அத்துடன்
மட்டுமல்லாது கானொளி ஜஎனைநழ phழநெஸ வசதிகளும் இளம் வயதினரிடையே கவனக்
கலைப்பான்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறான வசதி தவறுகளின் மீதான ஈர்வையை
அதிகரித்துள்ளது என்றால் மிகையாகாது இவ்வயதினரை உணர்வு ரீதியாக பாதிப்புற
செய்யும் விதத்தில் செல்போன்கள் உச்சக் கட்ட பங்களிப்பை செய்கின்றன..
இணயத்தளங்கள் இவறறோடு சின்னத்திரைகளும் தவறாது தவறுகளையே தினம் தோறும்
காண்பிக்கின்றன. இவ்வாறு ஏற்படும் உணர்வு ரீதியான குழப்பம் காதல் என்ற உருவில்
பரிணமிக்கின்றது. தற்காலத்தில் காதலில் உண்மைத் தன்மை என்பது மிகவும் அருகிப்
போய் விட்ட விடயமாகவே உள்ளது. சுருக்கமாக கூறின் “காதல் ஒன்றும் கடவுள் இல்லை
ஓமோன் செய்யும் கலகம் தானடா” என்பதே நியமாகின்றது.
எமது சமூக அமைப்பின் அந்தஸ்து பேதம், சீதனம் போன்றவற்றாலும் காதலினூடு வாழ்வை
அமைத்துக் கொள்ள எத்தனிக்கும் யுவதிகள் வாழ்வு காதல் வன்முறைகள் என்ற
பக்கத்தில் திருப்பப்பட்டு சிதைவுறுகின்றது.
இவ்வாறே சமூக அந்தஸ்து சமூகத்தின் கோரமாக பார்வையில் இளவயதுக் கர்ப்பம்
வலுவாகவே மாட்டிக் கொள்கின்றது. இந்நிலையில் மேலும் தவறுகளை அனுசரிக்கும்
விதமாக சில வசனம் கையாளப்படுகின்றன. “மருந்து இருக்கு ஒன்றுக்கும் பயப்பட
வேண்டியதில்லை” என்ற நம்பிக்கை ஊட்டல் வாசகங்களை நம்பி தவறுக்கு
ஆட்படுத்தப்படும் யுவதிகளுக்கு தெரிய வேண்டும். அம்மருந்துகள் நாட்டின்
சிலபகுதிகளில் விற்பனையில் இல்லை என்பதும் கருச்சிதைவு மேற்கொள்ளலில்
ஏற்படும் உயிராபத்தும் கட்டாயம் தெரிய வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
கருச்சிதைவு என்றால் மிகவும் எளியது என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும்.
குற்றவியல் கருச்சிதைவு என்பதே அதிகமாக கருக்கலைப்பு என்ற பெயரில் சில
சட்டவிரோதமான முறையில் இரகசியமாக நிறைவேறுகின்றது. இறுதியில் இவர்கள்
உயிராபத்துடனும், உயிர் ஆபத்தை அண்மித்த நிலையிலும் அரச மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகின்றன.
குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்ளும் போது தொற்று நீக்கல் என்னும் விடயம்
பொதுவாக கவனிக்கப்படுவதில்லை என்றே கூற வேண்டும். இதனால் குற்றவியல்
கருச்சிதைவுக்கு உள்ளான பெண் சில நாட்களில் கருதிப் பெருக்குடன் காய்ச்சல்
ஏற்பட்டு குருதி முழவதும் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைகின்றனர்.
இதுமட்டுமல்லாது சில குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்பவர்கள் கம்பிகள், சில
வகை மரகுச்சிகள் (ஆமணக்கு) போன்றவற்றை பயன்படுத்துவதால் மரணம் என்பது
உறுதியாகவே உள்ளது.
இவை இவ்வாறிருக்க மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை கூடத்தில் சில
சந்தர்ப்பங்களில் கருச்சிதைவுகள் மேற்கொள்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு.
அவ்வாறான நிகழ்வில் னுரூநு ஜனடையவழைn யனெ நஎயஉரயவழைn ஸசிகிச்சை
மேற்கொள்ளப்படும். இச்சிகிச்சையில் கருப்பையின் வாய் திறக்கப்பட்டு கருப்பை
உள்ள சிசு உறிஞ்சி எடுக்கப்படும்.
இச்செயற்பாடு மயக்க மருந்தேற்றப்பட்டு நிலையில் மேற்கொள்ளப்படும். கருப்பை
வாய் திறக்கப்படும் போது ஏயளழஎயபயட ளாழஉம என்ற நரம்பு சார் அதிர்ச்சி
ஏற்படுவதுண்டு. இந்த நரம்பு சார் அதிர்ச்சி ஏற்படின் உயிராபத்து ஏற்படும்
சாத்தியங்கள் மிக மிக அதிகம். சத்திரசிகிச்சை கூடத்தில் மின்முறை
அவனிப்பான்களின் உதவியுடன் இதன் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும்
இங்கே தான் கவனிக்க வேண்டும். குற்றவியல் கருச்சிதைவு மேற்கொள்ளப்படும் போது
மயக்க மருந்து பயன்படுவது மதுசாரத்தால் மயங்கிய நிலையிலேயே
மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏயளழஎயபயட ளாழஉம வரும் வாய்ப்புக்கள்
தாராளமாகவே உண்டு.
இச்செயற்பாட்டை மேற்கொள்பவர் மயக்க மருந்தேற்றும் வைத்தியருக்கான குறைந்த
பட்ச அறிவை கொண்டிருப்பரா என்ற கேள்விக்கு விடை காண முடியாது உள்ளது. இதனால்
ஏயளழஎயபயட ளாழஉம வரும் போது மரணம் சம்பவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு
இதைவிட சிசுவின் பகுதிகள்ஜிசழனரஉவ ழக உழnஉநிவழைஸெ முற்றாக அகற்றப்படாவிடன்
கருப்பை சுருங்கி இயல்பான நிலைக்கு வராது கருப்பை சுருக்கும் போது குருதிக்
குழாய்களின் வெளித்தோன்றல் குறைக்கப்படுகின்றது. இதனால் குருதியிழப்பு
குறைகின்றது.
இவ்வாறால்லாமல் சிசுவின் பகுதிகள் கருப்பையில் எஞ்சுமாயின் குருதியிழப்புடன்
இறப்பு; ஏற்படு என்பதே உறுதி.
இவ்வாறு குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்ளும் போது பயன்படும் ஆயுதங்களால்
தவுறதலாக கருப்பையின் சுற்றயலில் காணப்படும். நேர்குடல், சிறுநீர்ப்பை என்பன
தாக்கமுறுவதும் இதனால் சில சமயங்களில் பிற்காலத்தில் சிறுநீர், மலம் போன்றன
யோனிப்பாதை விழி வெளியேறவும் சந்தர்ப்பங்கள் உண்டு.
இவ்வாறான மிகை ஆபத்தை ஏற்படுத்தும் கருச்சிதைவு ஒரு விசப்பரீட்சை என்றே கூற வேண்டும்.
மேலும் கருச்சிதைவு மேற்கொள்வதாலும் எதிர்பாராத கர்ப்பத்துக்கு ஆளாவதாலும்
பாலியல் நோய்கள் உருவாகும். வாய்ப்புகள் அதிகம் என்றே கூறலாம்.
எனவே கருச்சிதைவை உண்டு பண்ணும் அளவிற்கு அறிமுகமில்லாத காதல்களும், முகவரியில்ல
நட்பும் கண்வுடன் காதல் இந்த நிலை மாற வெண்டும் காதல் என்பது புனிதமானது. அது
வாழ்வுக்கு தேiவாயனது காமத்தைமட்டும் உள்ளீடாகக்கொண்ட மேற்படி காதல்கள் காதல்
அல்ல. அவை காதல் சிதைவுகளே காதல் காமத்தை அடிப்படையாக கொண்டு அமைவதைவிட
காதல் அன்பை கொண்டு கட்டிஎழுப்பப்படின் வாழ்வின் பிற்காலங்களிலும் இனிமை
குன்றாது. காமத்தின் வாழ்வு ஏறக்குறைய பெண்களில் நாற்பத்தைந்து வயது வரை
என்றுதான் கூறவேண்டும். எனவே காமத்தின் உணர்ச்சியூட்டலில் கர்ப்பம் வரை
சென்று கருச்சிதைவால் உயிர் இழப்பதும் கருச்சிதைவு செய்ய முடியாத சூழ்நிலைகளில்
தற்கொலை செய்வதும் என்று நகர்வதாயின் தொடர்ந்தும் காதல் சிதைவுகளையும்
கருச்சிதைவுகளையுமே சந்திக்க நேரிடும்.

கண்களுக்கு கணினி எதிரியா?

கணினியில் நீண்ட நேரம் பணி புரிபவர்கண்டு.  கண்நோவுடன் சார்ந்தாக ஒரு தொகை கூட்டு விளைவுகள் உதைப்படுவதை பலரும் கூறியிருப்பர். கணினியின் முன் உட்சார வேண்டிய தேவை இருக்கின்றது. கண்வலி, தலைவலி, இப்படி நோய் நிலையும் காணப்படுகின்றது. இன்று மட்டும் தான் வலிக்கிறது என்றால் பறவாயில்லை.நாளையும் கணினி முன் அமர்ந்து ஆக வேண்டும் தொடர்ந்தும் எனின் வேலை….. இப்படியாக பரிதாப நிலை

தலைவலி என்று சொல்வதைவிட கணினியை கண்டாலே தலைவலி என்ற உணர்வு. இவ்வாறான துன்பத்தை உணருபவர் நம் சமூகத்தில் உள்ளனர். கணினி தொடர்பான கற்கைகள் பயில்வோர் மற்றும் கணினியில் தட்டெருத்தாளர் மற்றும் கணினி நீண்ட நேரம் பயன்படுத்துவோர் இந்த வகையினுள் இணையத்தள அரட்டையில் பொழுது போக்கும் பலரும் அடங்குகின்றனர்.

பொதுவாகச் சொல்லப் போனால் கணினியை அதிக நேரம் பயன்படுத்துவோர் என்ற பட்டியலில் எல்லாருமே அடங்கும் காலம் தான் இன்p உருவாகும் கணினியில் தேவைகள் அதிகரித்துவிட்டது, கணினிப்பயன்படும் அதிகரித்துவிட்டது…
கணினிப்பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் கணினி தேவைகளும் கூட அதிகரித்துவிட்டன. எனவே கண்களுக்கு வலி என்று கணினியை ஒதுக்க முடியாது அதற்காக கண்களை கெடுக்கவும் முடியாது.

கண் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைப்பற்றி நாம் கவனிக்கும் போது அதன் பகுதிகள் எவ்வாறு நகர்கின்றன என பார்த்தால் தூரப்பொருளை பார்ப்பதற்கும், கிட்டப்பொருளை பார்ப்பதற்கு ஒளி மிக்க சூழலில் பார்ப்பதற்கு, ஒளி குறைந்த சூழலில் பார்ப்பதற்கு என்று பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் இவை. எல்லாம் கண்ணில் தானாகவே செயற்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக கமராவை யாவரும் அறிவோம் அதுவும் கண்ணைப் போன்ற ஒரு செயற்பாட்டு ஒற்றுமையை காண்பிக்கின்றது. நாம் கமராவில் கிட்ட உள்ள பொருளை படம் எடுப்பதற்கும், தூர உள்ள பொருளை படம் எடுப்பதற்கும் என்னமாற்றம் செய்கின்றோம் என்று அனைவரும் அறிவர் ணுழழஅ என்ற சொல்லையும் அறிவர்.

இதுபோல கமராவில் வில்லை அசைக்கப்படுகிறது தூர உள்ள பொருளை படம் எடுக்கும் போது வில்லை முன்னோக்கி நகர்கின்றது.

ஆனால் எமது கண்ணில் அப்படி வில்லையை நகர்த்த முடியாது. ஆனாலும் இவை எல்லாம் எவ்வாறு நடைபெறுகின்றன இங்கு கண்வில்லை. (லென்ஸ்)யின் தடிப்பே மாற்றப்படுகிறது. இதன் போது கிட்ட உள்ள பொருளையும், தூர உள்ள பொருளையும் பார்ப்பதற்கு ஏற்றவாறு கண்வில்லை தடிப்பை மாற்றிக்கொள்கிறது.

உதாரணமாக பாலுண் உதைப்பட்ட நிலையில் கோணவடிவாக இருப்பதாக கருதின் அதன் இரு அந்தங்களை பிடித்து இழுப்பின் அதன் வடிவம் நீள் கோளமாகும். நீள்கோளமாகும் போது அதன் தடிப்பு சற்று குறையும் அவ்வாறே கண்ணிலும் வில்லைகள் சில தசை நார்களால் இணைப்பட்டுள்ளன. இத்தசை நார்களே எமது பார்வையின் தூரத்திற்கேற்ப கண்வில்லையை ஈர்க்கின்றன இத்தசை நார்களை நாம் கவனத்தில் கொள்வோம்.

நாம் தொடர்ந்தும் மிகவும் கிட்டவுள்ள கணினித்திரையை பார்த்து கொண்டிருந்தால் அதற்காக அத்தசை நார்கள் தம்மைத் தொடர்ந்து பேண வேண்டும் அதனால் களைப்படைவதற்கு வாய்ப்புக்கள் உண்டு தானே. இவை செய்கின்ற வேலையின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் கண்வலி வருவது நியாயம் என்றுதான் தோன்றும் நாமும் தொடர்ந்து கிட்டவுள்ள அதுவும் குறித்த தூரத்தில் உள்ள கணினித்திரையை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க. இத்தசைகள் சிறிதும் ஒய்வில்லாமல் தமது தொழிலை செய்யமுடியுமா… அத்தசைகளாக எம்மைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் இச்செயற்பாடு பற்றி கோபம் தான் வரும் எனவே நாம் அவற்றிற்கு குறித்த நேரத்திற்கு ஒரு தடைவ ஓய்வு கொடுக்க வேண்டும். அதாவது ஒருமணி நேரத்திற்கு ஒரு தடைவ ஐந்து நிமிடமாவது தூர உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். ஜன்னல் ஊடாக தூரத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளை பார்த்தல் கூட ஒய்வாகவே அமையும்.

இதன் போது நாம் கண்களை சிமிட்டிக் கொள்வதும் மிகவும் ஏற்புடையது கண்கள் உலராமல் இருப்பதற்காகவே கண்கள் சிமிட்டப்படுகின்றன. நாம் கண் இமைக்காமல் சில மணிநேரம் உற்று நோக்கிய வண்ணம் இருந்தால் எமது கண்ணில் கண்ணீர் வரும் அது கண்ணை ஈரலிப்பாக்கும் இவ்வாறு நிகழாது போயின் கண் வரண்டு போகும் தூசு துணிக்கைகள் காற்றில் உள்ள கிருமிகள் கண்ணில் தாக்கி அழற்சியை உண்டு பண்ணும்.

கணினிப்பாவனை அதிகம் உள்ளவர்கள் தமது கண்களைப் பாதுகாத்துக்கொள்ள கணினிக்கு பாதுகாப்பு திரை இடலாம் இல்லாவிடின் குறித்த நேரகிடைவெளியில் சிறிது நேரம் தூர்ததுப் பொருட்களை பார்த்து கண்ணின் தசைகட்டு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் இவை தாண்டி தொடரும் பிரச்சினையாயின் கண் மருத்துவரை நாடலாம் எனவே

கணனிகள் கண்களுக்கு எதிரிகள் அல்ல அவற்றை பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. தொடர்ந்து உற்று உற்றுப்பார்ப்பதை தவிர்த்து கண்களிற்கு சிறிது ஓய்வு கொடுப்பின் கணனிகளால் ஏற்படும் ஊழஅpரவநச ஏளைழைn ளலனெசழஅந இலிருந்து விடுதலை பெறலாம்.

எனவே நாம் பார்க்கின்ற பார்வையில் தான் உள்ளது கணினி எதிரியா? நண்பனா? என்பது.

புகைத்தலால் இன்பமிழக்கும் இல்லறம்

    வாழ்க்கை என்பது சில்லென்று ஒரு காதல் என்று முடிவதில்லை. கண்ணை;பறிக்கும் மலர்த்தோட்டம், அது தனிக்கூட்டம் அன்பு, பண்பு அறன் என்பவற்றை உடைய அரசாங்கம் இங்கே வீசுகின்ற தென்றாலும் சில்லென்ற குளிரோடைகளும், மலை முகடும் அலை கடலும், பச்சைபசேல் வெளியும் உறவாட என்றல்ல. பேசும் மழலைத்தேனீக்களின் ரீங்காரமும் உலகம் மறக்கச் செய்யும், தென்றல் பரிசுமும், சிரித்தும், மகிழ்ந்தும் வாழ்வது……         
     இவ்வாறாக வாழ்க்கைக்கு புகைத்தல் பேரிடியை உண்டு பண்ணுகிறது அண்மைக்கால ஆய்வுக்கற்கைகளில் புகைத்தலால் ஆண் மலட்டுத்தன்மை தொடக்கம் உடலுறவில் ஈடுபட முடியாமை வரை ஏற்படுகின்றது.

     சிகரெட் புகையில் வெளிவரும் நிக்கோட்டின் ஆண்களின் விந்து உற்பத்தியில் பாதிப்பை உண்டு பண்ணுகிறது. இதனால் விந்தின் அசையும் தரவு குறைவடைதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு. இதனூடு கருக்கட்டலை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் குறைவடைகிறது. மற்றும் விந்தணுக்களின் உருவ அமைப்பிலும் பல குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக வினைத்திறன் குறைந்த விந்தணுக்கனே உற்பத்தியாகின்றன. இவற்றினால் கருக்கட்டும் தரவு மேலும் குறைகின்றது.

     இவ்வாறே கரு உருவாக்கத்தில் வினைத்திறன் குறைந்த விந்துகளால் பாதிப்பை புகைத்தல் உண்டுகின்றது. இது ஆண்களில் இவ்வாறிருக்க பெண்களில் கருக்கட்டல், உட்பதித்தல் என்பனவும் பாதிப்புறுகின்றன. இவற்றுடன் சுயாதீனமாக கருக்கலப்பு நிகழவும் புகைத்தல் காரணமாகிறது. இங்கு எமது சூழலில் பெண்கள் புகைப்பது குறைவு என்றாலும் புகையை சுவாசிக்கும் சந்தர்ப்பம் குறைவு என்று கூற முடியாது. இவ்வாறு கருவளத்தை ஆண் பெண் இருவரிலும் புகைத்தல் பாதிக்கின்றது.

     இதைவிட புகைத்தலால் உருவாகும் நிக்கோட்டின் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதனால் இரத்தக் குழாய்கள் பாதிப்புறுவது பற்றி அறிந்திருப்பீர்கள்.

     புகைத்தலால் மாரடைப்பு ஏற்படுதல் பற்றி நன்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் இது போன்றே புகைத்தலால் இளவயதில் பாரிசபாதம் ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம் என்றும் அறிந்திருப்பீர்கள். இதைவிட ஆண்களில் உடலுறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுவதற்கும் இதே வகையான பொறிமுறையூடு நிக்கோட்டின் தொழிற்படுகிறது. புகைப்பழக்கம் இல்லாத ஒரு மனிதரில் இரத்தகுழாயில் கொலஸ்ரோல் படிதல் நிகழ்வது மிகமிக குறைந்த வேகத்தில் அதாவது கிட்டத்தட்ட அவனது ஆயள்காலத்தின் முக்கால் பங்கை கடந்துவிட்ட நிலையிலேயே இரத்தக்குழாய் கொலஸ்ரோல் முற்றாக நிரம்புகிறது.

     இதை இன்னும் சுலபமாக விளக்கிக்கொள்ள நீர்க்குழாய்களில் உட்பகுதியில் கல்சியப்படிவுகள் காணப்படும் அவை முற்றாக குழாயை அடைப்பதில்லை குழாயின் உள்பரப்பில் படிகின்றன இதனால் குழாயின் உள்விட்டம் குறைவடைகின்றது இவ்வாறே குருதிக்குழாயில் கொலஸ்ரோல் படிவதும் அமைகின்றது. இதன் படிவுவேகத்தை புகைத்தல் மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

     இந்நிகழ்வு மூளையில், இதயத்தில் இரத்தக்குழாய் அடைக்கப்பட்டு குருதி வினியோகம் தடைப்பட்டே பாரிசவாதம், மாரடைப்பு ஏற்படுகின்றது. ஆனால் இப்பொறி முறையால் ஆண்களில் இலிங்க உறுப்பிற்கு இரத்தம் வழங்கும் குழாய்களிலும் கொலஸ்ரோல் படிவுகள் ஏற்படுவதால் இரத்ததின் பாய்ச்சுகை குறைக்கப்படும்.

     இதயத்தில் மரடைப்பு அல்லது மூளையில் பாரிசவாதம் என்பன இரத்தக்குழாய் முற்று முழுதாக அடைக்கப்டும் போது ஏற்படும் என்று கூறலாம். ஆனால் ஆண் உறுப்பின் விறைப்புத்தன்மையானது இரத்தக்குழாயின் உள்விட்டம் குறைவால் இரத்தப்பாய்ச்சுகையின் அளவுக் குறைவுடன் பாதிக்கப்படுகின்றது.

     இதைவிட நிக்கோட்டின் மூளையை தூண்டுவதால் ஆண் இலிங்க உறுப்பின் தசைகள் சுரங்குகின்றன. இவற்றுடன் புகைத்தலால் இரத்தகுழாய்களின் வால்பு பொறிமுறையும் பாதிப்புறுகின்றது. இதனால் ஓர் ஆணினால் பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போகின்றது. இந்நிலையினை உளவியல் ரீதியாக நோக்கின் இதன்  ஊடு மன உளைச்சல் ஏற்படுகின்றது. இவ்மன உளைச்சலானது அம்மனிதனின் மேற்படி பாலியல் செயற்பாட்டை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. இவ்வாறு ஒரு விசவட்டத்துள் நகர்கின்றது இல்லறம் ……
     இவ்வாறான நிலையை உண்டு பண்ணும் புகை இளைஞர் மத்தியில் நண்பனாக நடிக்கும் மோசமான துரோகி என்றே கூறலாம். 

புகைப்பவர் யாரோ….

புகைப்பதால் சுவாசநோய்கள் புற்றுநோய்கள் வரும் என்பது யாவரும் அறிந்தது… இதைவிட
சிகரெட் பெட்டிகளில் கூட இவ்வசனங்கள் விளம்பர வாக்கியங்களாக
பயன்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்தது. எனினும் இங்கு புகைப்பவர் பற்றி
கருதவில்லை. புகைப்பவரின் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் குருதிப்புற்று நோய்க்கு
ஆளாவது அண்மைக்கால ஆய்வுக் கற்கைகளை நிரப்பிய வண்ணமே உள்ளன.
உடலில் காணப்படும் குருதியானது இதயத்தின் வலிந்த பாய்ச்சுகையால் உடலில் சுற்றி
ஓட்டப்படுகிறது. இதனால் குருதியானது அதாவது உடலில் காணப்படும் குருதியின் எந்தவொரு
துணிக்கையும் சுவாசப்பை போன்ற, அங்கங்களை பல தடவைகள் கடக்க வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றன. அதாவது ஒரு வட்டப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்
ஓட்டவீரர்கள் எப்படியும் ஒரு குறித்த இடத்தில் காணப்படும் கம்பத்தை ஒவ்வொரு
முழுச் சுற்றின் பின்னும் கடக்க வேண்டியே அமையும் இவ்வாறே சுவாசப்பையை கடக்கும்
போது தான் காவி வந்த புழ2 காபனீரொட்சைட்டை மற்றும் கழிவுகளை விட்டு விட்டு
சுவாசக் காற்றை காவிச் செல்கின்றது. இங்கே சுவாசக் காற்று என்னும் போது நாம்
சுவாசிக்கின்ற வளி. இதில் சிகரெட் புகையும் சேர்ந்தே காணப்படும்.
புகைப்பவர்களால் வெளிவிடப்படும் புகையானது கணிசமான அளவில் வீட்டின் சூழலில்
தங்கிவிடுகின்றது.
       இப்புகையானது சிறுவர் சிறுமியரின் சுவாசக் காற்றில் காத்திரமான பங்கை வகிக்கும்.
       புகைத்தலின் மூலம் சூழலுக்கு வெளிவிடப்படும் இரசாயனப் பதார்த்தங்களை பட்டியல்
இட்டால் அது நீண்டு கொண்டே செல்லும்.
       இங்கு முக்கியமாக பென்சீன் வகை வேதிப் பொருளை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். இவ்இரசாயனப் பொருள் சிறுவரின் சுவாச வளியூடு நுரையீரலை அடைந்து
தொடர்ந்து குருதியினூடு பாய்ச்சப்பட்டு முழுக்குருதியிலும் பயணிக்கும்.
       மேற்படி பென்சீனானது குருதுpயின் கலங்களின் உருவாக்கத்தில் பெரிதளவில்
மாறுபாடுகளை ஏற்படுத்தவல்லது. குருதியானது திரவம், கலம் என்றும் உட்கட்டுமானத்தை
உடையது. இப்பொருளினால் குருதியில் காணப்படும் குருதிக்கலங்களின் உருவாக்கம்
பாதிப்படையும்.
       குருதிக் கலங்களின் உருவாக்கம் பாதிப்படைவதால் உருவாகும். மாறுபட்ட
குருதிக்கலங்கள் குருதியில் அதிகரிக்கும் இத்துடன் நின்றுவிடுவதில்லை.
தொடர்ந்தும் குருதிக் கலங்களின் உருவாக்கம் பாதிக்கப்பட்டெ காணப்படும். அதாவது
இவ்விரசாயனப் பதார்த்தம் குருதிக் கலங்களின் உருவாக்கத்திற்கான நிகழ்ச்சி
நிரலை மாற்றம் செய்து விடுவதால் தொடர்ந்தும் இத்தவறு நடைபெற்று புற்றுநோயின்
கோரப்பிடியினுள் தள்ளப்படுகின்றது.
       புற்றுநோயின் போது கலங்களின் உருவாக்கம் நடைபெறுகின்ற போது ஏற்படும் தவறுகளை
சீர்செய்வதற்கான ஜீன் கட்டமைப்பு பாதிப்புற்றிருப்பதால் தவறுகள் தொடர்ந்த
வண்ணமே நீழ்கின்ற ஒரு தன்பியலாகவே உபயோகத்திற்கு ஏற்றதல்லாதவாகின்றன.
இக்குருதிப் புற்று நோயானது தாக்கப்படும் கலங்களின் வகைக்கு ஏற்பவேறுபடும்.
இந்நோய்நிலையில் என்பு மச்சையும் இவ் புற்றுநோயாக்கிகளால் தாக்கப்பட்டு
குருதிக்கலங்களை செங்குருதிச் சிறுதுணிக்கைகள் வெண்குருதிச் சிறுதணிக்கைகள்,
நிணநீர் குழியங்கள், குருதிச் சிறுதட்டு என்பன பாதிக்கப்படும். இதனால்
குருதிச்சோகை, நீர்ப்பிடணம் குன்றல், குருதிக்கசிவு தோலின்கீழ் ஏற்படல்
மற்றும் நிணநீர்கணு வீக்கம் என்று இன்றும் பல நிலைகளாக தொடர்ந்த வண்ணம்
காணப்படும். புகைப்பவர்களால்
பாவம் அறியாத சிறுவரின்
குருதியில் புற்றுநோய வரலாமா?

புற்று நோய் என்பது...

     புற்று நோய் பற்றி யாவரும் அறிந்திருப்பினும் அது தொடர்பில் பயம் எல்லோர் மனதிலும் காணப்படுகிறத. இதனால் புற்று நோய் தொற்று நோயாக இருக்குமோ என்று எண்ணுபவர்களும் உள்ளனர். இதனால் தமக்கும் வந்துவிடுமோ என்று எச்சரிக்கை உணர்வால் உந்தப்படுபவர்களும் உள்ளனர். புற்றுநோய் பற்றி எச்சரிக்கையுடன்  காணப்படும் மக்கள் புற்றுநோயி;ன் அறிகுறி பற்றியே அதிகம் அறிய முற்படுகின்றனர். அத்துடன் புற்று நோய் பற்றிய மன உலைச்சலாலும் நோயில்லாமலே மருத்துவரை நாடும் மக்கள் கூட்டம் என்று ஒரு வகையினரும் உருவாகியுள்ளனர்.

     இவர்கள் பொதுவாக நோயின் அறிகுறி பற்றியே அறிய முற்படுகின்றனரே தவிர நோயின் தோற்றுவாய் பற்றி அறிவதற்க்கு நோய் உருவாகும் விதம் பற்றி அறிவதற்கு ஏற்றவகையில் கருத்துக்களை அறிய முடியாதபடி மருத்துவம் தன்னை அந்நியப்படுத்தி விட்ட நிலையில் உள்ளது. இவற்றினால் மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலையில் இருந்து இன்னும் மோசமாக மக்கள் ஓசயல எடுத்தால் நோயை இனங்காணலாம் என்பதை தவறுதலாக ஓசயல எடுத்தால் ளுஉயn செய்தால் நோய் மாறும் என்ற தவறான எண்ணத்தில் மருத்துவ உலகின் கவர்ச்சியான விளம்பரங்களை எண்ணி தேவையற்ற கதிர்வீச்சல்களை உள்வாங்குதலும் வளமையாகிவிட்ட நிலையாக உள்ளது. தேவையற்ற கதிர் வீசல்களை உள்வாங்குவதால் கூட புற்று நோய் உருவாகலாம் என்பதை மக்கள் உணராத நிலை காணப்படுகிறது. இவை போன்றே மக்கள் மனதில் தவறான எண்ணங்கள் அதிகரித்துவிட்டன எனின் தவறல்ல… புற்று நோய் தொற்றி விடுமோ என்ற எண்ணமும் இவ்வாறே காத்திரமாகவே செறிந்துள்ளது.
புற்று நோய் என்பது கலங்களின் ஒழுங்கற்ற கட்டுக்கடங்காத வளர்ச்சி என்றே கூற வேண்டும். சாதாரண இழையங்களில் கட்டிகளாக அல்லது கழலைகளாக மாறிய கலங்களே புற்று நோய் என வெளிக்காட்டப்படுகின்றன.

     இவை நீருடோ சுவாசத்தூடோ அல்லது தொடுகை போன்றவற்றினூடோ மற்றும் வழிகளினூடாக தொற்றுவன அல்ல.

     உடற் தொழிற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் போது உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, இதய நோய்கள் இவை போன்று பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு உடல் இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களே; காரணமாகின்றன. எனினும் இவை பற்றி எவரும் தொற்றுவதாக அஞ்சுவதில்லை இவ்வாறான ; மனப்பான்மை மக்களிடையே புற்றுநோய்தொடர்பாக உருவாதல் வேண்டும். ஏனெனில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளில்  கதிரியாக்க, இரசாயன சத்திர சிகிச்சை முறைகள் காணப்படினும் நோயின் தீவிர நிலையில் அன்பான பராமரிப்பம் ஒர் சிகிச்சை முறையாகவே காணப்படுகின்றது.

     புற்றுநோயை பற்றி நாம் கருதுகையில் எமது உடலானது கலங்கள் என்னும் சிறு அமைப்புக்களால் ஆனது அதாவது சிறுவர்கள் உருவாக்கள் செய்வதற்கு பயன்படுத்தும் டீரடைனiபெ டிடழஉமள போன்றவை என்றே கூறலாம். இன்னும் கூறின் வீடு கட்டுவதற்கு பயன்படும் அரிகற்கள் போன்றவை. இவை ஒழுங்காக அடுக்கப்பட்டு கட்டப்படும் போது ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகின்றது.

     இவ்வாறே கலங்கள் என்னும் அமைப்புக்களாலும் எமது உடலை அதாவது ஒல்வொரு அங்கத்தையும் ஆக்குகின்றன. எமது உடலில் நாளாந்தம் கலங்கள் இறக்கின்றன. அவ்விடத்தை புதிய கலங்கள் நிரப்புகின்றன. இவையாவும் ஒரு சீரான விகிதத்தில் நடைபெறுவதால் உடலில் கட்டிகள் ஏற்படுவதில்லை. உடலில் கட்டிகள் ஏற்படும் Nபுhது அவை வெளித்தள்ளிக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கே நாம் சிந்திப்பின் குறித்த பகுதியில் கலங்களின் அபரிமிதமான (மிகை)வளர்ச்சியே காரணம் என்பதை உணரலாம்.

     உடலில் கலங்களின் உருவாக்கம் எல்லாம் சீரான விதத்தில் நடைபெறுவதற்கு என்று சிறப்புப் பொறிமுறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.     

     மனிதனது உடலும் கடவுளின் ஒரு விசித்திரமான படைப்பு என்நே கூறலாம். ஓர செயற்பாட்டை செய்வதற்கு கணணிகளில் எவ்வாறு நிகழ்ச்சி திட்டம் எழுதப்படுகின்றதோ அது போன்றே சுருக்கக் குறியீட்டு வசதிகள் பலவும் உருவாக்கப்பட்டு நிறமூர்த்தங்கள் என்னும் அமைப்புக்களில் கலங்களின் கருக்களில் காணப்படும் இந்த நிற மூர்த்தங்களின் தகவல்களின் அடிப்படையில் எமது உடலின் கட்டமைப்பானது ஆக்கப்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் காணப்படும் தகவல் மாறுபட்டு போகின்ற நிலையில் கலங்களின் வளர்ச்சியும் மாறுபடுகின்றன. அதனோடு கட்டுக்கடங்காத வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் ஏற்படும் தகவல் மாற்றங்கள் கதிர்வீச்சுக்கள் புற்று நோயை உண்டாக்கும் இரசாயன பொருட்களால் ஏற்படுகின்றன. மேலும் மனித உடலின் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு பொறுப்பான நிறமூர்த்தங்கள் இவை மரபணுக்கள் என்னும் ஜீன்கள் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். இவை உருவாக்கப்படும் போது ஏற்படும் தவறுகளை சீர் செய்வதற்காக விஷேட வகை மரபணு ஒன்று உருவாக்கப்படுகின்றது. இது Pள3 எனும் பெயர் பெறுகின்றது. எனினும் இவ் கட்டமைப்பு அலகில் தவறு ஏற்படும் போது சீர் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகள் எதுவுமில்லாத நிலையில் இக்கட்டமைப்பில் ஏற்படும் தவறே புற்று நோயாக வெளிக் காண்பிக்கப்படுகின்றது.

     இங்கு மனித உடலில் கட்டமைப்பை உருவாக்கிய கடவுளின் தவறு என்று கருத வேண்டிய நிலை காணப்படுகின்றது.

     இவ்வாறான புற்று நோயின் உருவாக்க பொறிமுறையை கருதும் போது நாம் அது தொற்று நோய் என்று கருதமுடியாதநிலை உறுதியாகின்றது.

     புற்று நோயால் பாதிப்புறுதல் கடவுளின் தவறு என்றே சொல்லும் நிலையில் தொற்றுமு; நோயாக அல்லாத புற்று நோயின் பாதிப்பில் வருந்தும் நோயாளியை வருத்துவது மனவேதனைக்குரிய தொன்றாகும். நோயாளி அவர் உங்கள் அன்புக்குரியவர்.

மதுப்பிரியர்களின் முகங்களில் மிளிர்வது அழகா?

 மது அருந்துபவர்களை தவறானவர்கள் என்பது தவறு.  எமது சமூகத்தின் தவறான எண்ணங்கள், விளம்பரங்கள் இவைதான் இவர்களைத் தவறானவர்களாக்குகின்றன.    அழகுமெருகேறும், உடல் ஆரோக்கியம் பெறும் என்ற தவறான எண்ணத்தில் கல்லூரி, விடுதி மாணவிகள் மத்தியில் பியர் குடிக்கும் பழக்கம் தலைதூக்கியுள்ளது.  பார்ட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த மதுபான விருந்து கலாசாரச் சீரழிவுக்கு வித்திட்டுள்ளது.  
     மதுவின் பின்னால் ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த காலம் போய் இப்போது இளம் பெண்களும் செல்லத் தொடங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் நம் நெஞ்சை உறைய வைக்கச் செய்கின்றது.

இத்தகவல்  நெஞ்சை உறைய வைப்பதாக மட்டும் இல்லை. எமது சமூகத்தின் உட்கட்டுமானத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் ஒரு நிகழ்வு என்றே கூற வேண்டும். பெண்கள் மதுவில் மயங்குவது என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் ஒரே விசையில் ஆதாழ பாதாளத்துள் அப்படியே தள்ளிவிடுவதாகவே உள்ளது.  மதுப்பிரியர்களாக ஆரம்பித்து அடிமைகளாக மாறுவதுதான் நியதி.  அதில் மாற்றம் ஏதுமில்லை என்றே கூறவேண்டும். 

இவர்கள் மூலம் உருவாகும் நாளைய தலைமுறையும் பாவம் அறியா வயதிலே கருவிலே மதுவினால் பாதிக்கப்பட்டு குறைபாடுகள் நிறையப் பெற்ற குழந்தைகளாகப் பிறக்கின்றனர். 

இவை யாவற்றையும் தாண்டிஈரல் என்ற உறுப்பு பற்றி சமூகத்தில் அதிகம் பேசப்படுவதுண்டு.  அதுவும் மிகவும் எளிமையாகவும் இலகுவாகவும் ஈரல் கருகிப் போய்விட்டது என்று.  எமது மக்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது மிகக் குறைவென்றே கூறலாம்.  ஈரல் என்பது என்ன செய்கின்றது என்று நோக்கின் அதன் தொழிற்பாடு என்ன ஈரல் பாதிக்கப்பட்டால் விளைவு என்ன என்பது பற்றி எல்லாம் அறியாமல் இவ்வாறு கூறுகின்றரோ தெரியாது.  ஒரு ஈரல் பாதிக்கப்பட்டவரை அவரது உயிரைத் தக்கவைப்பது என்பது…. ஒரு மிகப் பெரியதொரு கடினமான விடயம் என்பது வைத்தியருக்குத்தான் தெரியும். 

ஈரல் பாதிக்கப்பட்டால்p மருந்துகள் பலவற்றைப் பயன்படுத்த முடியாது.  ஏனெனில் ஈரல் தொழிற்படின் மட்டுமே அனேகமான மருந்துவகைகள் உடலில் உள்ள கலங்களினால் மருந்துகள், கழிவுகள் ஈரலினால் உடைக்கப்பட்டு அகற்றப்படுவதும் தடைப்பட்டுப் போகும். 

இங்கு ஈரல் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குப் பெரும்பாலும் அனேகமான மருந்துகள் நச்சுத்தன்மையானவையாகவே காணப்படும்.  இப்படி என்னால் காப்பற்ற முடியுமா?  கடவுளால்கூட இயலாது என்றே கூறவேண்டும்.
இவ்வாறான நிலை யாருக்கு? அதிகம் குடிப்பவர்கட்குத்தான் உருவாகும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.  குடிப்பவர்களில் ஈரல் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமே.  உயர்தர குடிவகை, தாழ்தரக் குடிவகை, மிகை குடிகாரர், மிதான குடிகாரர் என்றெல்லாம் வகை பிரிப்பது ஏற்றதல்ல.   உடுப்பு வகையின் அளவுபோன்று சிpறிது நடுத்தரம் என்றல்ல.  எல்லாமே மிகைதான். 

மதுவில் மூழ்குபவருக்குத் தெரியாது.  தான் எந்தளவு குடிகாரன் என்பது.  எனினும் மது தொடர்பான குற்ற உணர்வு ஏற்படும் போது அவர் மதுவில் தங்கிவாழ்பவர் என்ற நிலையில் உள்ளார் என்பதே அர்த்தம்.  இதை மாறி அர்த்தம் கொள்ள முடியாது.  அதாவது அவர் திருந்துவார் என்று.  அவர் மதுவைக் கைவிட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதன் அறிகுறியே.  மதுதொடர்பான குற்ற உணர்வு என்றுதான் சொல்லவேண்டும்.

இதைவிட மதுவுக்கும்…ஒவ்வோர் மனிதருக்கும் ஒவ்வொரு சகிப்புத்தன்மை காணப்படுகின்றது.  மனித இனம், பால்வகை என்பவற்றுக்கு ஏற்ப மதுவினால் ஏற்படும் பாதிப்பும் மாறுபடுகின்றது. மதுபானத்தினால் மதிமயங்கும் தன்மை, முகம் அதைப்புறல், தலைவலி ஏற்படல் போன்றவையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வோர் விதமாக அமைகின்றது. 

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் மதுப்பாவனையாளர்க்கே உரிய முகத்தோற்றம் இதுவும் ஆளுக்கு ஆள் மாறுபடும்.  இம்மதுப்பாவனையாளருக்கே உரிய முகத்தை நமது இளம் சந்ததியினர் அழகுமிளர்வதாய் கருதுவதே இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மதுப்பவனையாளருக்குரிய முகம் என்னும் போது கன்னங்கள் சற்று அதைத்துக் காணப்படும்.  (Pயசழவனை ளுறநடடiபெ)   இதனால்  ஏற்படும் முகத்தோற்ற மாற்றம் அழகு என்று வர்ணிக்கப்படுகின்றது. எனினும் இம்மாற்றம் நிகழும் போது ஈரலில் உயிர் இரசாயன மாற்றங்கள் பல நிகழ்ந்து விடுவதைப் பற்றி அறிந்தும் அறியாதவை என்று தான் கூறவேண்டும். 
மேலும் மதுபானத்தின்  தாக்கம் பற்றிக் கருதும் போது ஈரல் பாதிப்புறுவது ஆண்களைவிடப் பெண்களில் அதிகம் என்றே ஆய்வுக் கற்கைகள் குறிப்பிடுகின்றன. 

மது அருந்துவதால் ஈரல் பாதிப்புறுகின்றது.  இது பல படிமுறைகளில் நிகழ்கின்றது.  இதன் ஆரம்பப் படிமுறையாக குயவவல டiஎநச   அமைகின்றது.  இதனைத் தொடர்ந்து  hநியவவைளை  இதனூடு  கiடிசழளளை   ஈற்றில் டiஎநச உசைசாழளளை   என்று நகர்கின்றது.  மேற்படி இடைநிலைகளில் மது அருந்துவதை நிறுத்திக் கொள்ளின்,  ஈரல்  தன்னை மீண்டும் நல்ல நிலைக்குத் தேற்றிக் கொள்ள முடியும்.  எனினும் மது அருந்துதல் தொடருமாயின் ஈற்று விளைவு என்பது உறுதி என்றே கூறவேண்டும்.  இங்கு  குயவவல டுiஎநச   இவ் கொழுப்பு உடைத்தழிக்கப்படுவதால் ஈரலில் கொழுப்புப் படிவுகள் ஏற்படுகின்றன.  இந்நிலையில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் அற்றவர்களாகவே காணப்படுவர்.  தொடர்ந்து மது அருந்திவரின் மேலும் பாதிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே செல்லும்.  அவ்வாறில்லாமல் மதுவுக்கு விடை கொடுப்பின் மீண்டும் சுகதேகியாகத் தொடர்ந்தும் வாழ முடியும். இவ்வாறு மது அருந்தும் போது ஈரலில் காணப்படும் பல நொதியங்களின் அளவுகள் மாற்றமடைகின்றன. அத்தோடு சுரக்கப்படும் தன்மையும் மாற்றமடைகின்றது. 

மேலும் அண்மைக்காலங்களில் வுhந நேற லுழசம வiஅநள   இல்  வெளியான ஆய்வுக்கற்கைகளில் மது அருந்துவதால் ஏற்படும் ஈரல் பாதிப்புப் பற்றி அறியப்பட்டுள்ளது. இதன்போது தினம் ஒருகிண்ணம் ;பியர்எனறு பயன்படுத்துவோரில் கூட யுடயniநெ யுஅiழெவசயளெகநசயளந ழச யுடுவு   என்ற நொதியம் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டமை அறியப்பட்டது.   இது ஈரல் பாதிப்பையே சுட்டி நிற்கின்றது. 

இவை யாவற்றிலும் இருந்து அழகென்பது எது என்பதை உணரும் நிலை எமது இளம் சந்ததியினரிடம் உருவாக வேண்மு;.  ஒரு இளைஞரின் ஆற்றலை இளைஞர்கள் உணரவேண்டும்.  எமது சமூகத்தில் உருப்படியான வழிகாட்டல் எதுவுமில்லாத நிலையில் தவறான கருத்துக்களை விளம்பரங்களும், சினிமாக்களும். சின்னத்திரைகளும் தாராளமாக வழங்கி உசுப்பேத்தி அவர்களை ரணகளமாக்குவதை நாம் நேரில் தரிசிக்க முடிகின்றது.

இளைஞரின் வலுவை மது, புகை என்று அல்லது ஆக்கப் பாதையில் விசையுடன் செலுத்த வகை செய்து எம் சமூகத்தின் ஆன்மாவை உயிரூட்ட வேண்டியது யாவரினதும் கடமையேயாகும்.

இளவயதில் பாரிச வாதம் ஏற்படுத்தும் புகைத்தல

பாரிச வாதம் ளவசழமந என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும். இதில் கை கால்வழங்காது
போதல் அல்லது இழுத்தல் குரல் மாற்றம் முகம் கோணலாதல் (இது முகவாதம் )என்பன
கானப்படலாம் இது தொடர்பாக யாவர் மனதிலும் பயம்காணப்படுகின்றது. அத்துடன் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கட்கு மனச்சோர்வுஏற்படுவது கருதத்தக்க விடயமாகும். பாரிசவாதத்தின் பிடியில் இருந்து மீண்டு விடினும்பாரிசவாதத்திற்கு ஆளானவர்கள் தம்மை தாமே குறைத்து மதிப்பிடும் தன்மையம் தங்கி வாழும் நிலையையும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றனர்.
இதைவிட பாரசவாதத்தினால் ஒருவர் பாதிப்புறும் போது அவரது முழுக்கு குடும் பமுமே
அவரினால் பாதிப்புறுவதுடன் அவர்களுக்கான பராமரிப்பு என்ற தொடர் நிலையை சகிக்க
முடியாமல் கூட சகிக்கின்ற நிலை நம் சமூகத்தில் காணப்படுகின்றது.
பெரும்பாலும் முதுமை நிலையில் பாரிசவாதம் ஏற்படினும் இளவயதினருக்கு ஏற்படுவதற்கான
காரணங்களில் முக்கிய இடத்தை புகைத்தல் பெறுகின்றது.
ஒருவர் வயது முதிர்ந்த நிலையில் பாரிசவாதத்தால் பாதிப்புறின் அவர் பெரும்பாலும்
ஏனைய குடும்பத்தினில் தங்கி வாழ்கின்றவராகவே காணப்படுவார். எனினும் இளம் வயதினரை
தாக்கும் போது தாக்கப்படுபவர் குடும்பத்தின் தலைவராகவும் முழுக்குடும்பத்தையும் கொண்டு
நடத்துகின்ற பொறுப்புக்குரியவராகவும் இருப்பதால் இதன் பாதிப்பை கருத்தில் கொள்வது
மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே உள்ளது.
புகைப்பதனால் அதாவது சிகரெட்டில் காணப்படும். நிக்கோட்டின் என்னும் பொருள்
குருதிக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது.
இவ் அடைப்பானது இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படின் மரடைப்பு ;
எனவும் மூளைக்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படும் போது பாரிசவாதம் எனவும் பெயர்
கொள்கின்றது.
இங்கு குருதிக்குழாயின் அகவளி பாதிப்புறுவதுடன் குருதிக்குழாயில் கொழுப்புப்
படிவுறுவதுடன் குருதிக் குழாயின் உள்விட்டம் குறைக்கப்படும் இதன் ஈற்று விளைவாக குருதி
விநியோகம் தடைப்படும்.
இவற்றுடன் மட்டு அல்லாமல் புகைத்தல் பல கூட்டு வளைவுகளையும் தன்னகத்தே
கொண்டிருப்பதால் அதாவது குருதியில் ர்னுடு என்னும் நல்ல கொழுப்பு வைகயின் அளவை
கறைப்பதுடன் மட்டுமல்லாது உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இவற்றுடன் மட்டுமல்லாது இரத்த
கழாயினுள் குருதி உறையும் தன்மையையும் என்றும் பாதக விளைவுகளை கொண்டிருப்பதால் புகைத்தல்
பாரிசவாதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகையாக்கப்படுகின்றது.
புகைத்தல் பற்றியும் புகைப்பதால் எற்படும் விளைவுகள் பற்றியும் யாவரும்
அறிந்திருப்பினும் இந்நிலை தொடர்பாக தெரிந்திருப்பினும் பாரிசவாதம் பற்றி
அறிந்திருப்பினும் புகைப்பவர்களை அதிலும் இளவயதினரை தாக்கும் இந்நிi தொடர்பாக
போதியளவு தெளிவின்மை காணப்படுகின்றது. அத்துடன் மட்டுமல்லாது பாரிசவாதத்தால்
தாக்கப்பட்டவர்க்கே அவரது மனநிலை தெரியும். பாதிக்கப்பட்டபின் ஞானம் வருவது என்பது
அவ்வளவுக்கு ஏற்படைய விடயமல்ல.
வருமுன் காப்பதே நன்று

மேலைத்தேய நாகரிகத்தால் வாலிபத்துடன் வற்றிப்போகும் வாழ்வு

     மேலைத்தேய நாகரிகத்தின் ஆளமைக்குள் எமது சமூகமும்; மெல்ல மெல்ல நகர்வதை நாம் காண முடிகின்றது. நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் காதல் மற்றும் காதலை அண்டியதாக மேலைத்தேய பாணியில் அமைந்த (னுயவiபெ) பொழுது போக்கு வாழ்க்கைமுறை இளவயதினரை மிகவும் கவர்ந்து வருகின்றது.

     இவ்வாழ்க்கை முறை எமது சமூகத்தினுள்ளும் நுழைகின்றது. இது பற்றி கவனம் செலுத்த வேண்டிய தேவை யாவருக்கும் உரியதே சினிமாப்பாடல்கள் தொடக்கம், சின்னத்திரை வரை காதலை மையமாகக் கொண்டே நகர்கின்றது. அது மட்டுமல்லாது பாடல்வரிகள் கூட மீசைவைத்த செடிகொடியா? ஆசை உனக்கில்லையா என்று உசுப்பேத்துவனவாகவே அமைகின்றன. இவை தாண்டி ஒரு கொக்கோகோலாவில் இரு குழாய் வைத்து என்று தீயை மூட்டும் தன்மையைத்தான் காண்பிக்கின்றன.

     மனித வாழ்க்கைக் காலத்தை பார்ப்பின் எண்பது வயது வரையும் வாழும் பெண்ணை எடுத்துக் கொண்டால் இவரது வாழ்வில் உதாரணமாக பாலியல் ரீதியாக உச்சதொழிற்பாட்டை 30-45 வரையில் கொண்டிருப்பினும் மிகுதியான காலம் சுமார் 35 வருடங்கள் மந்தமான அதாவது பாலியல் செயற்பாட்டின் செயற்திறன் குறைவடைந்து உள்ளதை அறியலாம்.

     இது எவ்வாறு இருக்க மேலைத்தேய வாழ்க்கை முறை பாலுணர்வுகட்கு தீனிபோடுவதாக அன்றி விருந்து கொடுப்பது போன்ற விதமாகவே உள்ளது. இதனூடு கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெற்றோர் அற்ற சிறுவர்கள் வாழ்க்கைத் துணை அற்ற பெண்கள் என்று மிகவும் பாரதூரமான பக்கங்களையே நமது நாட்டில் உருவாக்கிச் செல்கின்றது. இவை மேலும் விபச்சாரம் சிறுவர் துஷ்பிரயோகம் என்று பெரும் விசவிருட்சங்களையே ஆணிவேருடன் மண்ணில் நிலைகொள்ளச் செய்கின்றன.

     மேலும் எது சரி எது தவறு என்று கூற முடியாத அளவுக்கு தவறுகளையே கலாச்சாரமாக மாற்றும் ஈர்வையே உள்ளது. உலகமயமாதல் என்று கூறிக்கொண்டு கிராமத்தை விட பிற்பட்ட ஒரு வாழ்வு அதாவது கிராமப்புறங்களில் முன்பு அடிதடி, விபச்சாரம் என்பன காணப்பட்டன. எனினும் அவை தற்போது நாகரிகம் மிக்கவர்கள் என்று கூறிக்கொண்டு நகரவாழ்வில் அடிதடி ரவுடிஷம் என்றும், விபச்சாரம் னுயவiபெஇ டுiஎந வழபநவாநச என்றும் பெயர் கொண்டு அன்பு, பண்பு, பாசம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் சிதையேற்றி தீ வைக்கும் மேலைத்தேய வாழ்க்கைமுறை.

     ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கு போது மனதை உறுத்துவதாகவே உள்ளது. ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கும் போது மனதை உறுத்துவதாகவே உள்ளது ;ஒரு பெண்ணின் ஆயுட் காலம் 45 வயதுடன் முடிவடையும் என்றால் மேலைத்தேய வாழ்க்கை முறையை வரவேற்று அதற்கு விருந்து வைக்கலாம் எனினும் அவ்வாறில்லை ஒரு பெண்ணின் ஆயுட்காலம் 80 வயது எனக் கொள்ளின் 45 வயதின் பின்னான காலம் வெறுமையாகவே காணப்படும். இதைவிட மேற்படி வாழ்க்கைமுறையைபெரிதும்  கையாளும் வர்க்கம் பாலியல் தொழிலாளர்கள் என்றே கூறலாம் இவர்கள் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதியை தனிமையிலும் வறுமையிலுமே கழிக்கின்றனர்.

             ஒரு ணெ;ணின் உடற் தொழிற்பாட்டை எடுத்து நோக்கும் போது மாதவிடாய் என்பது முக்கியம் பெறுகின்றது. அதுபோல மாதவிடாய் நிறுத்தம் என்பதும் அதைவிட முக்கியம் பெறுகின்ற ஒரு விடயமாகும். இதன்பின் (மாதவிடாய் நிறுத்தத்தின்) ஒரு பெண்ணின் உடல், உள ரீதுpயாக பல அசௌகரியங்கள் உணர ஆரம்பிக்கப்படுகின்றன. இவை Pழளவ அநnழியரளயட ளலனெசழஅந எனப்படும். அதாவது…
     உளரீதியாக…
•         பதற்றமடையும் தன்மை,
•         மனதில், ஆறதலின்மை,
•         தூக்கமின்மை,
•         எதிலும் கவனம் செலுத்த முடியாமை,
•         மனதளர்ச்சி,
•         இலகுவில் சினமுறல்,
•         நெருக்கீட்டு தாக்கங்கள் மற்றும்

     உடல் ரீதியாக..
•         அதிககளைப்பு,
•         மூச்செறிதல்,
•         உடல் நிறை அதிகரித்தல்,
•         உடல் உஷ்ணமாகி இருத்தல்.
•         அத்துடன் சிலருக்கு உடலில எரிவு இருப்பதாக உணர்தல் இவற்றோடு
    பாலியல் ரீதியாக…
•         பெண் உறுப்பின் நெகிழ்தன்மை குன்றல் வரட்சியடைதல் போன்றவற்றுடன்
•         உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படும் இவற்றூடு பார்க்கின்ற போது மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்த மட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. மேலும் பெண்ணின் பாலியல் ரீதியான உடற்தொழிற்பாடும் மாதவிடாய் நிறுத்தத்துடன் ஏற்படும் ஓமோன் பற்றாக்குறையால் எல்லைப்படுத்தப்படுகிறது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண் துணையை தேடும் மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும், பாதுகாப்பையும் வழங்கக் கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றனர். இவர்கள் இந்நிலையை அணுகும்போது இவர்களின் வாழ்க்கை முறையால்.. இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப் போன ஆண்கள் இளம் யுவதிகளை நாடுவதாலும் இன்னும் டுiஎந வழபநவாநசஇ னுயவiபெ போன்றவை குடும்ப வாழ்க்கை முறை, திருமணம், குழந்தை என்னும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொளளாத ஒரு தன்மை உடையதால் இவ்வாழ்க்கை முறையினூடு குறித்த வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.

     இவ்வாறான வாழ்க்கை முறையின் தன்மையை அறிந்தும் அறியாமல் நம் சமூகத்தில் நகரை அண்டிய கற்றவர்கள் பெரிதும் தமது தொழில் நிமித்தம் உதாரணமாக நகரத்தில் தொழில் புரிவோர் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து தமது செலவுகளை பகிர்ந்து கொண்டு வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் பின் இவர்களில் எவராவது ஒருவர் வேலையில் இடமாற்றம் பெறின் புதிய இடத்தில் அவ்வாறான வாழ்க்கையை அமைப்பதும், புதிய துணையை தேடிக்கொள்வதும் என்று டுiஎந வழபநவாநச வாழ்க்கை முறையும்.

     பாலியல் தேவைகளுக்கு தீனிபோடும் னுயவiபெ வாழ்க்கை முறையும் … குறித்த வயதெல்லையின் பின் வரண்டு போய் விடுகின்றது….அதாவது வாலிபத்தின் காலம் முடிவுறுவதுடன் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.

 

தொற்று நோய்கள் இன்னும் இன்னும்……… கூடுமா?

    தற்போது டெங்கு நோயின் தீவிரம் சற்றேகுறைந்துவிட்டது எனினும் நெருப்புக் காயச்சல்  போன்ற நீரால்த் தொற்றும் நோய்கள் பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமையாகும்.

     நீரூடாக நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, கொலரா போன்ற பல நோய்கள் ஏற்படும்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பற்றி விபரிப்பதில் அர்த்தமில்லை. இவற்றின் தோற்றுவாய்களை இனங்கண்டு துரித கதியிற் செயற்பட வேண்டியே உள்ளது. இதுவே காலத்தின் தேவையாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை மிகவும் விறுவிறுப்பாக வீறுநடை போடுகிறது என்றே சொல்லாம். எனினும் மிகமிகக் குறைந்த வசதிகளுடனேயே அதுநடை பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

     குறிப்பாக மருத்துவ ரீதியாக அதாவது சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் அமைக்கப்படும்போது பல விடயங்கள் கணக்கில் எடுக்கப்படும். அவை எல்லாம் ஒருபுறம் இருக்க நெருக்கடி அதிகரித்;து விட்டது. மேலும் மேலும் தொற்றுநோய்கள் உருவாகின்றதற்கான நிரந்தர மூலங்கள் உருவாக்கப்படும் நிலமை ஏற்படுகின்றது. எமது மண்ணில் நோய் இனங்காணப்படுவதும் அதற்கான மூலம் எதுவென இனங்காண்பதற்கும் இரசாயன ஆய்வு வசதிகள் போதாத நிலை காணப்படுகின்றது. எமது கல்வி பெரிதும் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு எந்தவொரு ஆய்வுகளும் திறம்பட நடப்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றது. இப்படியான நிலையில் புதிய வகையான சூழலுக்கு, சகிக்கும் திறன் கூடிய நோய்க்கிருமிகள் உருவாகும் சந்தர்ப்பம் அதிகம்  ஏற்படலாம்.

     உதாரணமாக நெருப்புக்காய்ச்சல் எனின் எந்தவகையான நுண்ணுயிரி அதை உண்டு பண்ணுகின்றது என்பதை இனங்கண்டு அதை அழிப்பதற்குரிய வகையான நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக எல்லா நுண்ணுயிர் கொல்லிகளும் எல்லா வகையான நுண்ணங்கிகளையும் கொல்லுமா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இவற்றின் தொழிற்பாடும், ஒரு ஏவுகணை விமானத்தை எவ்வாறு தாக்குகிறது என்பது போன்றுதான் வெப்ப நாடிவகை ஏவுகணைகள் வெப்பத் தோற்றுவாய்கள் இருப்பினே விமானத்தைத் தாக்கும் அதுபோன்றே நுண்ணங்கிகளையும் சிலவகை அடையாளப்படுத்தல் ஊடே நுண்ணுயிர்க் கொல்லிகள் தாக்குகின்றன. இவ்வகை அடையாளப்படுத்தல் என்பது சில புதியவகை விகாரத்திற்குள்ளான நுண்ணங்கிகளில் சாத்தியமற்றதே இதனால் மருந்தின் தாக்கும் வலுவும் குறைந்து போகின்றது. மருந்து பயன்படுத்தியும் கட்டுப்படு;தமுடியாது பேகின்றது..

     இவையாவற்றினையும் விஞ்சி எமது மக்களிடம் சுயமருந்துப் பாவனையும் மருந்துகளின் தவறான பாவனையும் மித மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பாவனையும் அதிகரித்துவிட்டது. எனவே மருந்துகளுக்குப் பழகிப்போன கிருமிகள் என்ற நிலை காணப்படுகிறது. எனவே நொய் கட்டுக்கடங்காத நிலை உருவாகவும் கூடும்

     தற்போது உள்ள நடப்பு யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் குடிநீரில் கலக்கும் தகவு மிகையாகவே காணப்படும் நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக மண்ணின் வடிகட்டும் தகவு பற்றிய எண்ணக்கருக்கள் எவ்வளவு தான் எற்புடையதே என்று கேட்கும் அளவிலே தான் உள்ளன… ;. மற்றும் மலக்கழிவில் பல நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான நுண்ணுயிரிகள் ஒரு நோயை உண்டு பண்ணும் சந்தர்பம் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் நோயும் குறித்த ஒருவகையான நுண்ணுயிர் கொல்லியால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் இவற்றுடன் இந்நுண்ணுயிரிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள போதியவசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இது மேலும் கடினமாகிறது.

     இதைவிட நகரின் நெருக்கடி கூடிய பகுதிகளில் மலசல கூடங்களின் அதிகரித்த பாவனை ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறான நிலையில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் இவை ஒப்படைக்கப்படின் வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கும்@ அத்துடன் சுத்திகரிப்பு தேவை இயன்றளவு பூர்த்தி செய்யப்படும் நிலை உருவாகும்.

     இவ்வாறான சுகாதார வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நீர் மூலம் தொற்று ஏற்படுவதற்கான நிரந்தர தோற்றுவாயாக குடிநீர் அமையும் தன்மை காணப்படும். இவை மட்டுமல்லாது தோல் நோய்களும் கூடவே ஏற்படும் தகவும் உருவாகும்.

அதிகரித்துவிட்ட தன்னம்பிக்கை தளர்வுகளும்….

தற்போது தற்கொலைகள் தமக்கு உரிய புதிய வேகத்தில் நகர்கின்றன. இதற்கான
காரணங்களை கருதும் போது
எதிர்மறை விமர்சனங்கள் எல்லைதாண்டியநிலையில்
எமது சமூகத்தில் நொந்து போன மனிதர் மீது பழிப்புக்களை
மடடுமே படையல்களாக படைக்கும் எம் மனிதர் கூட்டங்களால் நொந்து போன மனிதர்
மேலும்வெந்து போவதும் விரக்தி நிலை அதனூடு வன்முறை அல்லது தற்கொலை நோக்கி நகர்வதும்
தன் முனைப்பு சிந்தனைகள் முளைவிட முடியாத நிலையும்…. மாணவர்கள் மற்றம்
மக்களிடையே வாசிப்புத்திறன் குன்றிவிட்டதுடன்கேள்விகளை சுமந்து செல்பவனே
விடைகளையும் சுமந்து சென்று ஆலோசனை கேட்கவேண்டிய காலம்என்றால்
சொல்லவேண்டுமா….இன்னும் இ;ன்னும் இவை தாண்டிப்போன நிலையில்
சாதிப்பது தான் வாழ்வு என்ற எண்ணம்.
போட்டிப்பரீட்சைகளை இலக்காக கொண்டு உருவான சமுகம் சாதிப்பதுதாண பெருமை என்ற
எண்ணத்துடன் மழலைகள் முதுகில்கூட மனஉளைச்சலை மட்டும் அடக்கிசெல்வதாய்
தொடர்கிற ….நியம் இவ்வறே…..
 சாதிப்பது மட்டுமல்ல சோதித்துக் கொண்டு விடுபடுவதும் வாழ்வே என்று
உணராத நிலை அதுதாண்டி வீழாமல் இருப்பதில் இல்லை. மகத்துவம் வீழ்ந்த பின்னும்
மீள்வதில் தான் உண்டென உணரும் நிலை உருவாகும் வரை…தொடரும் நெருக்கீடு
நெருக்கீடடின் ஆர்முடுகல் இயக்கத்தில் கதியிழக்கும் சமுகத்திற்கு
ஆற்றுப்படுத்தலின் ஆபத்தில்லாத தன்மையை ஆற்றுப்படுத்தலின் நம்பகத் தன்மை
இரகசியங்கள் பேணப்படல் போன்றன பற்றி; உணராப்படல் வேண்டம்
ஆற்றுப்படுத்தல் என்பது ; எம் சமூகத்தில் மருந்துகளுடு தான் நிகழும் மருத்துவம் என்ற
தவறான மனநிலையும் தொடர்ந்து செல்லும் தொடர் நிலைகளாக…. ஆற்றுப்படுத்தல் அது
சமுக கட்டமைப்பின் பல சம்பிரதாய நிகழ்வகளின் அதாவது வைபவங்களின் உள்ளத்தை
உள்ளத்தால தேற்று;ம் உறவுகளின் தேற்றல் என்று ; உணராத நிலையில் மருந்துகள்
தொடர்பான கசப்புணரவு இவற்றால அன்னியப்பட்டு விட்ட ஆற்றுப்படுத்தல்…மீண்டும்
உயிபெற வேண்டும்..
 அனர்த்தங்களில் உடல் காயங்கள் ஏற்படுவது போன்று அல்லாது உளக்காயங்கள்
எற்படுவது மிக அதிகமாகும்.
உளப் பேரதிர்வானது ஏற்பட்டிருப்பினும் பலர் வெளிப்பாடையாக உணர முடியாத
நிலையிலேயே இருப்பர். இதனால் இவர்கள் மெய்ப்பாட்டு நோய்களாகவும் மனச்சோர்வு
போன்று பல வகையில் வெளிப்படுத்துவர். இவற்றில் மனச் சோர்வானது துயரங்களை
எதிர் கொள்வதால் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதும் அத்துடன் அவை மீள மீள
வந்து ஆழ அமிழ்த்தி மனிதனை மூழ்கடிக்கக் கூடியவையுமாகும்.
இதன் அறிகுறிகள்
•       அதிக கவலை
•       மகிழ்ச்சியான விடயங்களில் ஆர்வமின்மைஃ மகிழ்ச்சி
கிடைப்பினும்அனுபவிக்க முடியாமை
•       வுpரக்தி
•       கண்ணீர் சிந்துதல்ஃ அழுதல் மிகை குற்ற உணர்வு
•       தன்னகத் துறுவு
•       உணவில் ஆர்வமின்மை
•       அதிக களைப்பு
•       நித்திரை இன்மைஃ நித்திரைக் குழப்பம்
•       மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
•       தன்னம்பிக்கையின்மை
•       தற்கொலை எண்ணம் என பலவாறு கூறினாலும்
      ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தன்னம்பிக்கை இழத்தலும் அதை தொடர்ந்து
தற்கொலை யூடு பயணம் செய்வதும் என்ற அமைகிறது.
      மனச் சோர்விற்கான சிகிச்சை முறையை நோக்கம் போது ஆற்றுப்படுத்தல் மற்றும்
பௌதீக முறைகள் என வேறுபடுகின்றது. பௌதீக முறைகள் என வேறுபடுகின்றது. பௌதீக
முறையில் மருந்து மாத்திரைகள் தொடர்பானதாகவும் மென் மின் அதிர்வு முறை
என்பனவும் அடங்குகின்றன.
      மருந்து மாத்திரை கொண்டு சிகிச்சை என்பது அண்மைக்கால ஆய்வுக்கற்கைகள் கொண்டு
நோக்கம் போது தெளிவான நன்மை பயப்பதாகவும் இல்லை.
      அண்மைக் காலத்தில் டீசவைiளா ஆநனiஉயட துழரசயெட டீஆது சற்று புதிய தகவல்களையும்
தருகின்றது. இதில் 372 சோதனைகளில் 100000 பேர் உட்படுத்தப்பட்ட போது
மனச்சோர்வுக்கான மருந்து மாத்திரைகளினால் 65 வயதுக்கு மேற்பட்டவர்கட்கு
தற்கொலை எண்ணம் குறைவடைகிறது எனவும் இளவயதினில் அவை தற்கொலை எண்ணத்தை
கூட்டுவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
      இவ்வாறான மருந்தியல் முறைசார் சிகிச்சைக்கான எதிர்ப்பு கருத்துக்கள் ஆய்வுகளை
நிரப்பிய வண்ணமே உள்ளன. இத்தோடு தற்போது தற்கொலைகள் அதிகரித்து ஆர்முடுகல்
வேகத்தில் நகர்கின்றன.
      போரின் பாதிப்புக்களை தொடர்ந்து ஆற்றுப்படுத்தல் என்பது மிகவும் சிறப்பாக
அமைய வேண்டிய தேவையை கொண்டுள்ளது. இதைவிட ஆற்றுப்படுத்தல் போதிய இடத்தை
மக்கள் மனதில் பிடிக்க முடியாமை கருத வேண்டிய ஒன்றாகும். (ஆற்றுப்படுத்துவொர்
கையாளும் முறைகள் பெரும்பாலும் மக்களை அன்னியப்பட்டு காணப்படுவதும்
கருதத்தக்கதாகவே உள்ளது).
      அத்துடன் ஆற்றுப்படுத்துகையானது புறக்கணிக்கப்படுகின்றது. கணிக்கப்பட்டது
ஒன்றாகவே உள்ளது. ஊக்கம் குன்றியதாகக் காணப்படுகின்றது. சில வருடங்களிற்று முன்
சிறப்பாக வெளிநாட்டு நிபுணர்கள் வருகையுடன் பேராசிரியர் தயா. சோமசுந்தரம்
மிகவும் பெரியதொரு சேவையை செய்து வந்தது. மெச்சத்தக்கதாகும்.
      இந்நிலையில் ஆற்றுப்படுத்தலின் தேவை அதிகரிக்கப்பட்ட நிலையில்
ஆற்றுப்படுத்தல் நிறுவனங்கள் முடங்கிக் கிடப்பதை நோக்கினால் கவலைக்குரியதாகவே
உள்ளது.
      எனவே வளர்க்க வேண்டிய தேவை பத்திரிகைகள் உளவளதுணை நிலையங்களையே சார்ந்தது.

மருந்து வில்லைகளுடு மட்டும் தானா மருத்துவம்

       எமது சமூகத்தில் தற்போது குறித்த வயது எல்லையை தாண்டினால் டாக்கடரை நாடி
செல்பவருக்கு ஏதாவது நோய் ஒன்று இருப்பதாக அடையாளம் இட வேண்டிய தேவை உள்ளது.
இல்லாது போனால் டாக்கடர் தரமற்றவர் என்று ஒரு புதிய கலாச்சாரம் காணப்படுகிறது.
இவற்றை எல்லாம் விஞ்சி உறவினர் காணும் போது கூட மக்கள் எனக்கு இன்ன இன்ன
நோய்கள் இருக்கிறது.; உங்களுக்கு எப்படி என்று கேட்கும் நிலைதான் சுகம்
விசாரித்தல் என்று அர்த்தப்படுவதாக உருவாகிவிட்டது.
       பொதுவாக குறித்த வயதின் பின் ஏதாவது ஒரு நோய் இருப்பதாக கூறி அதற்காக
வைத்தியசாலை செல்வது அத்துடன் ஏதேனும் மருந்து எடுப்பதாக சொல்வது தான் நாகரிகம்
என்று சொல்கின்ற நிலை..
       இவ்வாறான மக்கள் கட்டிடத்தை வியாபார நோக்கங்களில் நகரங்களில் அணுகுவதற்கு
மருத்துவ மனைகள் தயாராகிவிட்டன. இங்கு மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலை இன்னும்
காணப்படுகின்றது. நவீனமருத்துவ உலகின் போக்கினைப் பார்த்தால் மருந்துகளை
நோக்கி செல்வதாக அன்றி வாழ்க்கை முறை மாற்றங்களையே நாடிச் செல்கின்றது.
       சுருக்கமாக கூறின் எடுத்த எடுப்பிலேயே மருந்துகளை அள்ளி வழங்கிவிட நவீன மருத்துவ
சிந்தனைகள்தற்போது சிந்திப்பதில்லை. அதற்கு பதிலாக வாழ்க்கை முறையை
வடிவமைக்கும் விதம் பற்றியே அதிகம் கவனம் கொள்கின்றது. எடுத்த எடுப்பிலே
மருந்துகளை பாவிப்பதை தவிர்க்கும் வண்ணமே இவை நகர்கின்றன. ஏனெனில் எமது
வாழ்க்கை முறையில் காணப்படும் சிதைவுகள் பற்றியே கவனத்தில் கொள்ள வேண்டும்.
       புகைத்தல், மது ஆரோக்கியமற்ற உணவு முறை பருமனை உடலமைப்பு, உடற்பயிற்சி அற்ற
தொழில்முறை மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதமான நட்புக்கள் இவ்வாறு
அமைந்துவிட்ட சிதைவுகள் பல நம் வாழ்வில் காணப்படுகின்றன.
       புகைத்தல் மூலம் ஏற்படும் தீமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். உயர்குருதி
அமுக்க நோயுடைய ஒருவரை எடுத்து கொண்டால் புகைத்தல், மதுவருந்துதல் உணவுப்
பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றன ஆபத்தை உண்டு பண்ணும் காரணிகளாகவே
உள்ளன.
       இவற்றின் ஊடு பாரிசவாதம் வரை செல்லக் கூடிய நிலையை உண்டு பண்ணுகின்றன. உடல்
எடை அதிகரித்தல் மற்றும் உடற்பயிற்சிஇன்மை உணவு ஆரோக்கியமற்ற தன்மை
இவையாவும் ஒன்றில் ஒன்று தங்குகின்றன. இவற்றினூடு உடலின் கொழும்பு சேமிப்பும்
அதன் அளவுடன் சில வகை ஓமோன்களின் செல்வாக்குஇதனுடு மாரடைப்பு ஏற்படும் வீதமும்
மாறுபடு;கின்றது.
       இவ்வாறே எமது சூழலில் மன அளைச்சல் அதிகரித்துவிட்டது பொதுவாகி எந்த
பிரச்சனைக்கும் அன்றைக்கு என்ன தீர்வு என்Nறு நிலைக்கும் அளவுக்கு சிந்தனைத்
திறன் குறைவடைந்துவிட்டது. பிரச்சினைகள் பற்றி கூறி முடிவெடுக்க நினைக்கும் ஒருவர்
தொழில் தானங்களில் உயர் அதிகாரிகளிடம் பிரச்சினையுடன் தீர்வையும் சுமந்து
செல்ல வேண்டிய பரிதாபநிலை அத்துடன் உடனடித் தீர்வாக மன உளைச்சலை அதிகரிக்கும்
விதத்தில் ‘ஆப்பு’ வேலைகள் இப்படி ஒரு விச வட்டத்துள் மனஉளைச்சல் செல்கின்றது.
இவற்றுக்கு தீர்வாக தியானம், யோகாசனம், நூல் வாசிப்பு இவை எல்லாம் அருகிப்
போய்விட்டது.
       தற்போதைய மருத்துவ ஆய்வுகள் இவற்றையே கருத்திற் கொண்டு தமது போக்கை
மாற்றிச் செல்கின்றன. உதாரணமாக குருதியமுக்கம் உயர்வாக காணப்படுகிறது என்றால்
உடனே மருந்தினுள்.
       மருத்துவ உலகம் குதிக்கவில்லை தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவு வரை
குருதியமுக்கத்தை அளவிட்டு பார்க்கிறது. அதன்பின் சில வாழ்க்கை முறையில்
மாற்றங்களை உருவாக்குகிறது. மருந்துப் பாவனை என்று தொடங்கினால் இடையில்
நிறுத்தாமல் வாழ்நாள் பூராகவும் உபயோகிக் வேண்டி ஏற்படலாம் என்று மருத்துவ
உலகம் கவலை கொள்கிறது. இதனால் ஆபத்தற்ற, பக்கவிளைவற்ற உணவு அமைப்பு
மாற்றம், உடற்பயிற்சி மன அழுத்த குறைப்புக்கு தியானம், யோகாசனம் என்று
நகர்கின்றது.
       இவ்வாறே மருத்துவ ஆய்வுகளும் எல்லாத்துறைகளிலும் நகர்கின்றன. அண்மைக்கால்களில்
டீசவைiளா அநனiஉயட துழரசயெட வெளியான தகவலில் தற்கொலைகளை மனஅழுத்தத்திற்கு
பாவிக்கும் மருந்துகள்சில இளவயதினரில் கூட்டுவதாக ஆய்வு கற்கைகள் கூறுவதாக
தெரிவித்திருந்தது. எமது சூழலில் போரின் விளைவாக அதனூடு தன்னம்பிக்கை
தளர்வுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வேளையில் ஆற்றுப்படுத்தல் போன்ற
ஆபத்தற்ற செயன்முறைகள்மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும் சில வருடங்களின் முன்
பேராசிரியர் தயா சோம சுந்தரம் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு மிகவும்
திறம்பட ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வந்தமை மெச்சத்தக்க விடயமே ஆகும்.
       இவ்வாறு மருந்து மாத்திரைகள் மட்டும்தான் தீர்வல்ல. உடல், உணவு, ஆரோக்கியம்,
உள ஆரோக்கியம் அது தாண்டிய நிலையில் மருந்துகள் என்றாகிவிட்டது மருத்துவத்தின்
போக்கு… மனதும் ஒரு மருந்து தான்

Saturday, November 20, 2010

இதயத் துடிப்பு அது உயிர் நாடி

    இதயம் என்ற சொல்லை  எல்லா மனிதரும் அறிந்திருப்பார்கள்.  அதுபோலவே இதயத்தடிப்பு பற்றியும் யாவரும் அறிவர்.  எனினும் இவ் இதயத்துடிப்பில் ஒழுங்குமுறை மாற்றப்படும் போது ஏற்படும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் மாற்றங்களை உண்டுபண்ணும் காரணிகள் யாவை என்பதும் அறிந்தும் அறியாத விடயங்களே ஆகும்.



     இதயத் துடிப்பின் சந்தம் தவறும்போது மாரடைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படும்.  இற்றுடன் அல்லாது திடீர் மரணம் போன்றனவும் ஏற்படலாம்.



·         சிலவகை மருந்துகள்,

·         மதுபானங்கள்,

·         போதைவஸ்துக்கள் போன்றவை இதயத் துடிப்பினை ஒழுங்கற்றதாகவும் வீதத்தை அதிகரிப்பனவாகவுமே காணப்படுகின்றன.



     இதயத்துடிப்பின் ஒழுங்குமுறை தவறுவதால் மற்றும் இதயத்துடிப்பு வீதம் அதிகரி;ப்பதால் இதயத்தின் வலுவான குருதிப் பாய்ச்சுகை குறைக்கப்படுகின்றது.  இதனால் இதயத்தில் குருதி தேங்குதல் நிகழ்கின்றது.  இதனூடு குருதி உறையும் வாய்ப்பு இதயத்தினுள் நிகழுகின்றது. உறைந்த குரதித் துணிக்கைகள், தொடர்ந்தும் இதய அதிர்வால்  உடைக்கப்பட்டு சிறுதுணிக்கைகள் ஆக்கப்பட்டு குருதியினுடைய குருதிக்குழாய்கள்களினூடு பயணிக்கும்.



     இவ் உறைந்த குருதிச் சிறுதுகழ்கள் குருதிக்கலன்களை அடைக்குந்தகவுடையன இதனை நாம் எமது.





     நடைமுறை நாளாந்த வாழ்வில்  காணக்கூடிய, உதாரணத்தூடு எடுத்துநோக்கின் எமது வீடுகளில் காணப்படும் கழிவு நீர்;க்குழாய்கள் சில திண்மக் கழிவுகளால் அடைபடுவது போன்ற ஒரு நிகழ்வு என்பதை உணரலாம்.  அது போன்றே மேற்படி குரதிக்குடாய்கிளலும் உறைந்த குருதியின் உடைந்த சிறுதுகள் அடைப்பதால் குறித்த பாகத்திற்கு குருதி விநியோகம் தடைப்படும்.  இக்குறித்த பாகம் மூளை எனின் பாதிப்பை பாரிச வாதம் (storke)  எனவும் அதுபோலவே இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்கள் முடியுருநாடி என்படும்.  (ஊழசழயெசல யுசவநசநைள) இல் ஏற்படும் அடைப்பு; ((ர்நயசவ  யுவவயஉம) மாரடைப்பு என்றும் பெயர்கொள்ளப்படும்



     இவ் இதயத்துடிப்பின் ஒழுங்குதவறும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தை வலுவ+ட்டும் நிகழ்வாகவே மாணவர்கள், உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளுக்கு முன்னைய நாளில் விருந்து நிகழ்வில் மதுபானத்தை மிகையளவில் அருந்தும் நிகழ்வு காணப்படுகின்றது.  இந்நிலையில் ஏற்படும் இதயப் பாதிப்புக்கள் (ர்ழடனையல hநயசவ ளலனெசழஅந)  என்று பெயரிட்டு அழைக்கப்படும்.



     இதன்போது

·         நெஞ்சு படபடப்பு,

·         களைப்பு,

·         தலைச்சுற்று,

·         மயக்கம்,

·         நெஞ்சுவலி,

·         மூச்சுவிட சிரமம் என்பனவும் இவற்றைவிட பாரிசவாதம், மாரடைப்பு, திடீர் மரணம் என்பனவும் ஏற்படுகின்றது.



     இவ்வாறு மதுபானம் அருந்துவதால் நுpinநிhசiநெ  என்னும் பதார்த்தம் குருதியில் சுரக்கப்பட்டு அதிகரிப்பதால் பரிவு நரம்புத்தொகுதி தூண்டப்பட்டு இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கின்றது. அது அன்றி அதன் ஒழுங்கும் தவறுகின்றது.  ஈற்றில் மேற்கூறிய நோய்நிலையை நோக்கிச் செல்கின்றது.

  

மனிதனை  மட்டுமல்ல

    மனித இதயத்தையும் நெறி தவறச்

            செய்யும் மதுபோதை.

புற்று நோய் என்பது... தொற்று நோயல்ல.

...



     புற்று நோய் பற்றி யாவரும் அறிந்திருப்பினும் அது தொடர்பில் பயம் எல்லோர் மனதிலும் காணப்படுகிறத. இதனால் புற்று நோய் தொற்று நோயாக இருக்குமோ என்று எண்ணுபவர்களும் உள்ளனர். இதனால் தமக்கும் வந்துவிடுமோ என்று எச்சரிக்கை உணர்வால் உந்தப்படுபவர்களும் உள்ளனர். புற்றுநோய் பற்றி எச்சரிக்கையுடன்  காணப்படும் மக்கள் புற்றுநோயி;ன் அறிகுறி பற்றியே அதிகம் அறிய முற்படுகின்றனர். அத்துடன் புற்று நோய் பற்றிய மன உலைச்சலாலும் நோயில்லாமலே மருத்துவரை நாடும் மக்கள் கூட்டம் என்று ஒரு வகையினரும் உருவாகியுள்ளனர்.



     இவர்கள் பொதுவாக நோயின் அறிகுறி பற்றியே அறிய முற்படுகின்றனரே தவிர நோயின் தோற்றுவாய் பற்றி அறிவதற்க்கு நோய் உருவாகும் விதம் பற்றி அறிவதற்கு ஏற்றவகையில் கருத்துக்களை அறிய முடியாதபடி மருத்துவம் தன்னை அந்நியப்படுத்தி விட்ட நிலையில் உள்ளது. இவற்றினால் மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலையில் இருந்து இன்னும் மோசமாக மக்கள் ஓசயல எடுத்தால் நோயை இனங்காணலாம் என்பதை தவறுதலாக ஓசயல எடுத்தால் ளுஉயn செய்தால் நோய் மாறும் என்ற தவறான எண்ணத்தில் மருத்துவ உலகின் கவர்ச்சியான விளம்பரங்களை எண்ணி தேவையற்ற கதிர்வீச்சல்களை உள்வாங்குதலும் வளமையாகிவிட்ட நிலையாக உள்ளது. தேவையற்ற கதிர் வீசல்களை உள்வாங்குவதால் கூட புற்று நோய் உருவாகலாம் என்பதை மக்கள் உணராத நிலை காணப்படுகிறது. இவை போன்றே மக்கள் மனதில் தவறான எண்ணங்கள் அதிகரித்துவிட்டன எனின் தவறல்ல… புற்று நோய் தொற்றி விடுமோ என்ற எண்ணமும் இவ்வாறே காத்திரமாகவே செறிந்துள்ளது.

புற்று நோய் என்பது கலங்களின் ஒழுங்கற்ற கட்டுக்கடங்காத வளர்ச்சி என்றே கூற வேண்டும். சாதாரண இழையங்களில் கட்டிகளாக அல்லது கழலைகளாக மாறிய கலங்களே புற்று நோய் என வெளிக்காட்டப்படுகின்றன.



     இவை நீருடோ சுவாசத்தூடோ அல்லது தொடுகை போன்றவற்றினூடோ மற்றும் வழிகளினூடாக தொற்றுவன அல்ல.



     உடற் தொழிற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் போது உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, இதய நோய்கள் இவை போன்று பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு உடல் இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களே; காரணமாகின்றன. எனினும் இவை பற்றி எவரும் தொற்றுவதாக அஞ்சுவதில்லை இவ்வாறான ; மனப்பான்மை மக்களிடையே புற்றுநோய்தொடர்பாக உருவாதல் வேண்டும். ஏனெனில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளில்  கதிரியாக்க, இரசாயன சத்திர சிகிச்சை முறைகள் காணப்படினும் நோயின் தீவிர நிலையில் அன்பான பராமரிப்பம் ஒர் சிகிச்சை முறையாகவே காணப்படுகின்றது.



     புற்றுநோயை பற்றி நாம் கருதுகையில் எமது உடலானது கலங்கள் என்னும் சிறு அமைப்புக்களால் ஆனது அதாவது சிறுவர்கள் உருவாக்கள் செய்வதற்கு பயன்படுத்தும் டீரடைனiபெ டிடழஉமள போன்றவை என்றே கூறலாம். இன்னும் கூறின் வீடு கட்டுவதற்கு பயன்படும் அரிகற்கள் போன்றவை. இவை ஒழுங்காக அடுக்கப்பட்டு கட்டப்படும் போது ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகின்றது.



     இவ்வாறே கலங்கள் என்னும் அமைப்புக்களாலும் எமது உடலை அதாவது ஒல்வொரு அங்கத்தையும் ஆக்குகின்றன. எமது உடலில் நாளாந்தம் கலங்கள் இறக்கின்றன. அவ்விடத்தை புதிய கலங்கள் நிரப்புகின்றன. இவையாவும் ஒரு சீரான விகிதத்தில் நடைபெறுவதால் உடலில் கட்டிகள் ஏற்படுவதில்லை. உடலில் கட்டிகள் ஏற்படும் Nபுhது அவை வெளித்தள்ளிக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கே நாம் சிந்திப்பின் குறித்த பகுதியில் கலங்களின் அபரிமிதமான (மிகை)வளர்ச்சியே காரணம் என்பதை உணரலாம்.



     உடலில் கலங்களின் உருவாக்கம் எல்லாம் சீரான விதத்தில் நடைபெறுவதற்கு என்று சிறப்புப் பொறிமுறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.   



     மனிதனது உடலும் கடவுளின் ஒரு விசித்திரமான படைப்பு என்நே கூறலாம். ஓர செயற்பாட்டை செய்வதற்கு கணணிகளில் எவ்வாறு நிகழ்ச்சி திட்டம் எழுதப்படுகின்றதோ அது போன்றே சுருக்கக் குறியீட்டு வசதிகள் பலவும் உருவாக்கப்பட்டு நிறமூர்த்தங்கள் என்னும் அமைப்புக்களில் கலங்களின் கருக்களில் காணப்படும் இந்த நிற மூர்த்தங்களின் தகவல்களின் அடிப்படையில் எமது உடலின் கட்டமைப்பானது ஆக்கப்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் காணப்படும் தகவல் மாறுபட்டு போகின்ற நிலையில் கலங்களின் வளர்ச்சியும் மாறுபடுகின்றன. அதனோடு கட்டுக்கடங்காத வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இந் நிறமூர்த்தங்களில் ஏற்படும் தகவல் மாற்றங்கள் கதிர்வீச்சுக்கள் புற்று நோயை உண்டாக்கும் இரசாயன பொருட்களால் ஏற்படுகின்றன. மேலும் மனித உடலின் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு பொறுப்பான நிறமூர்த்தங்கள் இவை மரபணுக்கள் என்னும் ஜீன்கள் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். இவை உருவாக்கப்படும் போது ஏற்படும் தவறுகளை சீர் செய்வதற்காக விஷேட வகை மரபணு ஒன்று உருவாக்கப்படுகின்றது. இது Pள3 எனும் பெயர் பெறுகின்றது. எனினும் இவ் கட்டமைப்பு அலகில் தவறு ஏற்படும் போது சீர் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகள் எதுவுமில்லாத நிலையில் இக்கட்டமைப்பில் ஏற்படும் தவறே புற்று நோயாக வெளிக் காண்பிக்கப்படுகின்றது.



     இங்கு மனித உடலில் கட்டமைப்பை உருவாக்கிய கடவுளின் தவறு என்று கருத வேண்டிய நிலை காணப்படுகின்றது.



     இவ்வாறான புற்று நோயின் உருவாக்க பொறிமுறையை கருதும் போது நாம் அது தொற்று நோய் என்று கருதமுடியாதநிலை உறுதியாகின்றது.



     புற்று நோயால் பாதிப்புறுதல் கடவுளின் தவறு என்றே சொல்லும் நிலையில் தொற்றுமு; நோயாக அல்லாத புற்று நோயின் பாதிப்பில் வருந்தும் நோயாளியை வருத்துவது மனவேதனைக்குரிய தொன்றாகும். நோயாளி அவர் உங்கள் அன்புக்குரியவர்.

முரசுகரைவதை அலட்சியம்; செய்யலாமா?


முரசுகரைவது என்று எடுத்துப் பார்ப்பின் அனைவரும் என்றோ அறிந்த ஒரு அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். பல்துவக்கும் போது ஏற்படுவது சகஜம் என்று தான் கூறமுற்பட்டாலும் முரசுகதைவதை நாம் அலட்சியம் செய்துவிடின் அது பற்றி கவனம் செலுத்த தவறிவிடுகின்றோம். வேலைச்சுமை இவ்வாறு பல காரணங்களால் மருத்துவரை நாடுவதில் நேரத்தை வீணடிப்பதாக கருதுவதால் முரசுகரைதல் அலட்சியம் செய்யப்படுகின்றது. இதனூடாக சில சமயங்களில் பாரதூரமான நோய்நிலைகள் இனம் காணப்படலாம். முரசுகரைதல் பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம் பெரிதும் பாதகமற்ற நோய்நிலைகளில் முரசுகரைதல் ஏற்பட்டாலும் சில சமயங்களில் பாதகமான நோய்கள் சிலவற்றின் வெளிப்பாடாகவும் காண்பிக்கப்படுகின்றது. அதாவது குருதி சார் புற்றுநோய்களிலும் இவ்வறிகுறி காண்பிக்கப்படுகின்றது. சாதாரணமாக முரசுகரைதல்……..



     முரசில் ஏற்படும் அழற்சியாலும் அதன் ஊடு முரசில் பற்களில் படியும் படிவுகளினால் அதாவது பற்சுத்தம் பற்றி மிதமான கவனிப்புடன் உள்ளபோது ஏற்படலாம் இவை தவிர இவற்றின் தொடர் விளைவுகளாலும் தாடை என்பு வரையான கிருமித்தாக்கங்களினாலும் ஏற்படுகின்றது….. இவற்றைவிட சில விற்றமின் குறைபாடுகள் ஏவையஅin முஇ மற்றும் ளுஉரசஎல ஸ்கேவி நோய் போன்றவற்றுடன் மகப்பேற்றுக் காலங்களில் கற்பிணிகளிலும் ஏற்படுகின்றது.



     சில உயர்குருதியமுக்கத்திற்கு பயன்படும் மருந்துவகைகளும் முரசுகளின் மிகை வளர்ச்சியை தூண்டுகின்றன இவற்றின் போது பற்சுத்தம் தொடர்பில் போதிய கவனம் இல்லாத விடத்திலும் முரசுகரைதல் நிகழலாம்.



     இவை இவ்வாறிருக்க சில குருதி உறையா நோய்களிலும், குருதி சார் புற்றுநோய்களிலும் முரசுகரைதல ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.



     பற்சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் முரசுகரைதலை முறையான பற்சுத்தம் செய்யும் செயன்முறையை பல்மருத்துவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.



     எனினும் நாம் குருதிப்புற்று நோயை இனம் காணத்தவறி விடுவோமானால் மிகப்பெரிய பாதக விளைவை எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். இங்கு நாம் கருதும் குருதிசார் புற்றுநோய் குருதி மற்றும் என்பு மச்சையில் ஏற்படுகின்றது இதன் போது குருதிக்கலங்களின் அசாதாரண பெருக்கமும், உருவவியல் குறைபாடுகளும் ஏற்படுகின்றன என்றே கூற வேண்டும். இவ் குருதிசார் புற்றுநோய் (டுநரமநஅயை) நான்கு வகைப்படும். இது அவற்றின் தீவிரத்தன்மையை துரித கதியில் அடைவதையும் அவற்றின் தோற்றுவாய் எது என்பதையும் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.



     இது உயிர்கொல்லும் வுழி 10 புற்றுநோய் வரிசையில் இருப்பினும் இளநிலையிலே இனம் காணப்படின் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல குணப்படுத்தலாம் என்றே கூறமுடியும் அவ்வளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடிய ஒரு புற்றுநோய் என்பது இது தொடர்பாக உள்ள இதன் ஒரு நல்ல குணவியல்பு ; என்றே கூறவேண்டும்.



     எனினும் இளநிலையிலேயே இனம் காணத்தவறி உக்கிர நிலையை அடையும் போது இதன் விளைவாக குருதியில் அசாதாரண கலங்கள் பெருக்கமடைகின்றது அத்துடன் குருதியில் போசனை, ஒட்சிசன்காவும் செங்குருதிக்கலங்கள் எண்ணிக்கையும் குறையும் இதனால் குருதிச் சோகை ஏற்படும். இதைவிட வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கை குறைவும் புதிதாக உருவாகும் கலங்கள் நோய்எதிர்ப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதவையாகவும் காணப்படுவதால் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் தன்மை அதிகரிக்கும் இத்தோடு குருதியில் காணப்படும் குருதி உறைதல் அதாவது காயம் ஏற்படும் போது குருதிஉறைவை ஏற்படுத்தும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையும் குறைவுறுவதால் குருதிஉறைதல் தடைப்படும் இதனால்….. முரசில் காணப்படும் மயிர்த்துளைக் குழாய்கள் தாக்கப்படும் போது குருதி கசிவு ஏற்படும் இதன் விளைவாக முரசு கரைதல் ஏற்படும்.



     இவ்வாறு குருதிசார் புற்றுநோய் வெளிக்காண்பிக்கப்படுகின்றது. இதனை இதன் இளநிலையிலேயே இனம் காண்பது இதற்கான சிகிச்சையின் வெற்றியை தீர்மானிக்கின்றது. இக்குருதிசார் புற்றுநோய்கான தோற்றுவாய்க் காரணங்களாக சிலவகை இரசாயனப் பொருட்கள் குறிப்பாக டீநணெiநெ மற்றும் சிலவகை பிறவிக்குறைபாடுகள் னுழறளெலனெசழஅந இவற்றைவிட சிலவகை வைரசுத் தொற்றுக்களின் போதும் ஏற்படலாம் இவை எல்லாவற்றையும் விஞ்சி புகைத்தல் என்பது இதை துரிதப்படுத்தும் காரணியாகவே உள்ளது. அதாவது உயிர்ப்பற்ற புகைத்தல் அதாவது பெரியவர்கள் புகைக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் சிறுவர் சிறுமிகளும் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.



     முரசுகரைவதை அலட்சியம் செய்வதை தவிர்ப்பதன் மூலம் குருதிசார் புற்றுநோய் போன்ற தீயநோய் நிலைகளை இனம் காணலாம்.  இளநிலையிலேயே இனம் காண்பதால் புற்றுநோயை வெற்றி கொள்ளலாம்

புற்று நோய்க்கு வலுச் சேர்க்கும் நவீன வாழ்க்கை முறை

     புற்று நோய் பற்றி யாவரும் மனதிலும் பயம் உண்டு. ஆனாலும் எனக்கு புற்றுநோய் இருக்கா? கண்டுபிடித்து சொல்லுங்கள் டாக்டர் என்ற நிலையில் தான் எமது சமூகத்தில் பலர். ஆனால் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு எல்லாம் விண்ணைத் தாண்டி ஒலிக்கும் விதத்தில் வீச்சம் கொண்டு நகர்கின்றன. எனினும் புற்றுநோய்க்கு வலுச்சேர்க்கும் காரணிகள் இவை என்பது பற்றியும் எல்லோர்க்கும் தெரியும் இருப்பினும் இவை எல்லாம் ஏட்டு உருவில் மட்டும் தான் என்றுதான் ஐயம் தோன்றுகிறது. எனக்குப் புற்று நோய் இருக்கா என்ற ஐயப்பாட்டுடன் பயம் மிகுதியாகப் பெற்று சோதனைகள், இன்னும் சோதனைகள், சோதனை மேல் சோதனைகள் என்று பணத்தை வீணாக்கும் மக்கள் கூட்டம்.



     ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள எத்தனித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் எம் சந்ததி புற்றுநோயின் பிடியில் இருந்து மீளும் நிலை ஏற்படும்.



     ஆரோக்கியமற்ற உணவுமுறை அது தாண்டி உடற்பருமன் தேகப்பியாசம் துளியளவும் இன்றி உயர் செறிவில் கொழுப்புச் செறிவு இவையெல்லாம் ஒன்றில் ஒன்று ஆளுகை செய்கின்ற விசமிகள் என்று தான் கூற வேண்டும். மிகை உடலெடை கொண்ட பெண்களில் மார்பகம், சூல்சுரப்பி மற்றும் கருப்பையின் அகவுறை என்பவற்றில் புற்றுநோய் விருத்தியாகின்றது. இம்மூன்று உறுப்புகளிலும் கலவளர்ச்சியை தூண்டும் ஞநளவசழபநn ஈஸ்ட்ரோஜன் என்னும் ஒர்மோன் உயிரியல் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. கொழுப்பு மிகை உணவிற்கும் இவற்றுக்கும் மிடையான புற்றுநோய் தொடர்பை கருதுமிடத்து கொழுப்பு உணவுகளே ஈஸ்ரோஜன்னை குருதியோட்டர்ரினுள் மீள உறிஞசப்படக் கூடியவாறு அனுமதிக்க பெருங்குடலைத் தூண்டுகின்றதென நம்பப்படுகின்றது. இவ்வாறே கொழுப்புணவும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கும் இடையேயான தொடர்பை வநளவழளவநசழநெ எனும் ஓர்மோன் தீர்மானிக்கின்றது.



     இவற்றின் சமநிலைக்குழப்பம் புற்றுநோயை உருப்பெறச் செய்கின்றன.



     இது இவ்வாறே இருக்க தேகப்பியாசமின்மையும் மிகை கொழுப்புணவுடன் கைகோர்த்து நகர்கின்றது. உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை முறை பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழி வகுக்கின்றன. அத்துடன் தேகப்பியாசம் இன்மையே இங்கு தொடர்புபடுத்தப்படுகின்றது. அதாவது சொகுசு வாழ்க்கை முறையே உட்கார்ந்து பணியாற்றும் வாழ்க்கை என்று கருதப்படுகின்றது. தேகப்பியாசம் இன்மையில் கழிவுப் பொருட்கள் குடலினூடு செல்கையில் தங்கியிருக்கும் இடைத்தங்கல் நேரம் மிகைப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயாக்கிகள் குடலுடன் தொடர்பில் நீண்ட நேரம் இருக்கின்றன. இதனால் குடலில் புற்றுநோய் ஊக்கிகள்pன் தொடர்பினால் குடற்புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. இவற்றை தாண்டி உடற்செயற்பாடு ஆனது ஆண் பெண் இருபாலாரிலும் இலிங்க ஓமோன்களின் சுரப்பு அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. இதனால் ஞநளவசழபநn வநளவழளவநசழநெ அளவில் ஏற்படும் மாற்றமும் புற்றுநோய்க்கு வலுச் சேர்ப்பதை முன்பு நாம் அறிவோம். இவற்றுடன் அல்லாது கர்ப்பத்தடை மாத்திரை வகைகளும் இலிங்க ஓமோன்களின் அளவில் மாற்றத்தை உண்டு பண்ணுவது அறியப்பட்ட விடயமேயாகும்.இதுவும் நம் சமுகத்தில் பெரும் பங்கை வகிக்கின்ற ஒரு விடயமே ஆகும்



     இது இவ்வாறிருக்க புகை மது இவையும் சொல்ல வேண்டியதில்லை. புகையில் 4000க்கு மேற்பட்ட இரசாயனப்; பொருட்கள் உள்ளன. புகைத்தல் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது எல்லோரும் அறிந்த தொன்று என்றே கூற வேண்டும்.



     எனினும் மதுசாரத்தால் ஈரல் பாதிப்புறும் போது பல இரசாயனப் பொருட்கள் உடலில் பிரித்தழிக்கப்படாது தேங்குகின்றன. இதனுள் புற்றுநோய் ஊக்கிகளும் அடங்குகின்றன.



     ;.சூடான உணவுகள் காரம் சேர் உணவுகள் புகையூட்டப்பட்ட உணவுகள் இவை எல் லாம் நைட்ரைட்டுக்கள் கொண்டுபதனிடுவதால். இந்நைட்ரைட்டுக்கள் புற்றுநோயாக்கிகளாக அமைவதாலும் இவை நாகரிக உலகில் தொலைக்காட்சி, விளம்பரங்களில் அதிரவைக்கும் கவர்ச்சிகரமான தன்மையைக் கொண்டுள்ளமை கவலைக்குரியதாகவே உள்ளது.



     இது இவ்வாறிருக்க மிகை வளமூட்டிய மரக்கறிகள் மருந்தே;றிய, மற்றும் பூச்சி நாசினி விசிறிய மரக்கறிகள் இவையாவும் செய்யும் கொடுமையின் எல்லை தாங்க முடியாது என்றே கூற வேண்டும். பொதுவாக மரக்கறிகள் நார்ப்பொருட்கள் இவை குடலில் நீண்ட நேரம் தங்குவன. இவற்றுக்கு மருந்துகள் ஏற்றியும் பூச்சிநாசினிகள் விசிறியும் இருப்பின் சொல்ல வேண்டுமா குடலில் நீண்ட நேரம் இவ் இரசாயனங்கள் தங்குவது.. இதனால் குடற்புற்று நோய் வலுச் சேர்க்கப்படுகின்றது என்றால் மிகையாகாது.



     எனவே புற்று நோயில் இருந்து விடுதலை பெற்ற ஓர் சமூகத்தை உருவாக்கி ஆராக்கியம் மிக்க சமுகத்தை நோக்கி நகர வாழ்க்கை முறையை செப்பனிடுவோம்.