Saturday, November 20, 2010

இதயத் துடிப்பு அது உயிர் நாடி

    இதயம் என்ற சொல்லை  எல்லா மனிதரும் அறிந்திருப்பார்கள்.  அதுபோலவே இதயத்தடிப்பு பற்றியும் யாவரும் அறிவர்.  எனினும் இவ் இதயத்துடிப்பில் ஒழுங்குமுறை மாற்றப்படும் போது ஏற்படும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் மாற்றங்களை உண்டுபண்ணும் காரணிகள் யாவை என்பதும் அறிந்தும் அறியாத விடயங்களே ஆகும்.



     இதயத் துடிப்பின் சந்தம் தவறும்போது மாரடைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படும்.  இற்றுடன் அல்லாது திடீர் மரணம் போன்றனவும் ஏற்படலாம்.



·         சிலவகை மருந்துகள்,

·         மதுபானங்கள்,

·         போதைவஸ்துக்கள் போன்றவை இதயத் துடிப்பினை ஒழுங்கற்றதாகவும் வீதத்தை அதிகரிப்பனவாகவுமே காணப்படுகின்றன.



     இதயத்துடிப்பின் ஒழுங்குமுறை தவறுவதால் மற்றும் இதயத்துடிப்பு வீதம் அதிகரி;ப்பதால் இதயத்தின் வலுவான குருதிப் பாய்ச்சுகை குறைக்கப்படுகின்றது.  இதனால் இதயத்தில் குருதி தேங்குதல் நிகழ்கின்றது.  இதனூடு குருதி உறையும் வாய்ப்பு இதயத்தினுள் நிகழுகின்றது. உறைந்த குரதித் துணிக்கைகள், தொடர்ந்தும் இதய அதிர்வால்  உடைக்கப்பட்டு சிறுதுணிக்கைகள் ஆக்கப்பட்டு குருதியினுடைய குருதிக்குழாய்கள்களினூடு பயணிக்கும்.



     இவ் உறைந்த குருதிச் சிறுதுகழ்கள் குருதிக்கலன்களை அடைக்குந்தகவுடையன இதனை நாம் எமது.





     நடைமுறை நாளாந்த வாழ்வில்  காணக்கூடிய, உதாரணத்தூடு எடுத்துநோக்கின் எமது வீடுகளில் காணப்படும் கழிவு நீர்;க்குழாய்கள் சில திண்மக் கழிவுகளால் அடைபடுவது போன்ற ஒரு நிகழ்வு என்பதை உணரலாம்.  அது போன்றே மேற்படி குரதிக்குடாய்கிளலும் உறைந்த குருதியின் உடைந்த சிறுதுகள் அடைப்பதால் குறித்த பாகத்திற்கு குருதி விநியோகம் தடைப்படும்.  இக்குறித்த பாகம் மூளை எனின் பாதிப்பை பாரிச வாதம் (storke)  எனவும் அதுபோலவே இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்கள் முடியுருநாடி என்படும்.  (ஊழசழயெசல யுசவநசநைள) இல் ஏற்படும் அடைப்பு; ((ர்நயசவ  யுவவயஉம) மாரடைப்பு என்றும் பெயர்கொள்ளப்படும்



     இவ் இதயத்துடிப்பின் ஒழுங்குதவறும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தை வலுவ+ட்டும் நிகழ்வாகவே மாணவர்கள், உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளுக்கு முன்னைய நாளில் விருந்து நிகழ்வில் மதுபானத்தை மிகையளவில் அருந்தும் நிகழ்வு காணப்படுகின்றது.  இந்நிலையில் ஏற்படும் இதயப் பாதிப்புக்கள் (ர்ழடனையல hநயசவ ளலனெசழஅந)  என்று பெயரிட்டு அழைக்கப்படும்.



     இதன்போது

·         நெஞ்சு படபடப்பு,

·         களைப்பு,

·         தலைச்சுற்று,

·         மயக்கம்,

·         நெஞ்சுவலி,

·         மூச்சுவிட சிரமம் என்பனவும் இவற்றைவிட பாரிசவாதம், மாரடைப்பு, திடீர் மரணம் என்பனவும் ஏற்படுகின்றது.



     இவ்வாறு மதுபானம் அருந்துவதால் நுpinநிhசiநெ  என்னும் பதார்த்தம் குருதியில் சுரக்கப்பட்டு அதிகரிப்பதால் பரிவு நரம்புத்தொகுதி தூண்டப்பட்டு இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கின்றது. அது அன்றி அதன் ஒழுங்கும் தவறுகின்றது.  ஈற்றில் மேற்கூறிய நோய்நிலையை நோக்கிச் செல்கின்றது.

  

மனிதனை  மட்டுமல்ல

    மனித இதயத்தையும் நெறி தவறச்

            செய்யும் மதுபோதை.